siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 17 அக்டோபர், 2024

கோர விபத்து பிரித்தானியாவில் கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி ஐந்து பேர் பலி

பிரித்தானியாவின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்று கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. 
 ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
 இதுபற்றி கம்பிரியா பொலிஸார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ 
இடத்திலேயே பலியானார். 
 இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது



0 கருத்துகள்:

கருத்துரையிடுக