siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 12 அக்டோபர், 2024

அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து ஒருவர் பலி

யாழ்   அச்சுவேலி வல்லை பாலத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக
 கூறப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக