siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 4 ஜூலை, 2018

யாழில் வேலையில்லை! பட்டாதாரி இளைஞன் விபரீத முடிவு

படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரி இளைஞன் யாழில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி கச்சாய்ப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(02) பதிவாகியுள்ளதாக கொடிகாமம்
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் எழுதியுள்ள கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் "பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை...எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை,படித்தும் வேலை கிடைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன்(வயது- 29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக