siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 3 ஜூலை, 2018

கோர விபத்து…கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை  இடம்பெற்றுள்ளது.
பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார்.
பாதசாரிகள் கடவையை மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மோதியுள்ளது.வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகனசாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்
 தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக