siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,
 பாலமுனை ஆகிய 
பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் 
வழங்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி வாய்ப்புக்கள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், யு எஸ். எயிட்டின் பிரதி குழுத் தலைவர் அந்திரோ பேக்கர், குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரி.சக்திவேல் உட்பட கலந்து கொண்டனர்.
இதன்போது புரைலர் முகாமைத்தவ பயிற்சி கைநூல் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்சிற்கு குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் 
வழங்கி வைத்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக