siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை 
வழங்கியுள்ளது.
பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
 பிறந்த 402 குழந்தைகள் இறந்துள்ளதாக மகபேறு வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆலோசகருமான கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சிசு மரணங்களில் 201 மரணங்கள் மகபேறு அறையில் நிகழ்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக