siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்
 நடந்திருக்கிறது.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது.
பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது
 போலத்தெரிகிறது 
. விழுந்த துப்பாக்கி மீது ஏறி அந்த நாய் நடந்த போது அந்த துப்பாக்கியை தற்செயலாக வெடிக்கச் செய்திருக்கிரது.
ஓய்வூதியம் வாங்கும் இந்த நபர் கையில் துப்பாக்கிக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார். பிரான்சில் கடந்த ஆண்டு மட்டும் வேட்டை ஆடும்போது ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் விலங்குகள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு 
சுடப்பட்டவர்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக