siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளான்.

நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து 
செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக