siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 16 ஜனவரி, 2016

திருடிய பாடசாலை மாணவர்கள் மூவர் கைது!

வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் மூவரை, நேற்று முன்தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
கைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் 
கூறினர். 
கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக