siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 21 ஜனவரி, 2016

வீட்டு வேலை செய்து வந்த பெண்ணின் கை துண்டிக்கப்பட்டுள்ளது !

.சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து உரிய இழப்பீடினை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான கஸ்துரி சவுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவரை அந்த வீட்டின் உரிமையாளர் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் இவரை தடுத்து நிறுத்தும் நோக்கில் தாக்கியதில் இவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதியில் வசித்த இந்தியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசின் உதவியுடன் அவர் நாடு திரும்பினார்.
இதனிடையே கஸ்தூரி மற்றும் அவரது மகன் மோகனுடன் வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தவர்கள்,
சவுதியில் நடந்து வரும் வழக்கு குறித்த விவரங்களை இந்திய வெளிவிவகாரத்துறை உதவியுடன் தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
 கேட்டுக்கொண்டுள்ளனர்.
சவுதியில் நடக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கி தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடுத் தொகையை சவுதி அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை
 விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக