siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 8 ஏப்ரல், 2017

முல்­லைத்­தீ­வில் விவ­சா­யியின் உயி­ரைப் பறித்­த விசர்நாயின் ­ கீ­றல்

விலங்கு விசர் நோய்த் தொற்­றுக்­குள்­ளான நாயி­னு­டைய  பல்­லின் சிறு­கீ­றல் விவ­சா­யி­யின் உயி­ரைப் பறித்த சம்­ப­வம் முல்­லைத்­தீ­வில் 
இடம்­பெற்­றுள்ளது.
முல்­லைத்­தீவு குமா­ர­பு­ரம் முள்­ளி­ய­வ­ளை­ யைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான இரா­மையா சிவ­சாமி (வயது- –58) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.
குறித்த நபர் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயப்­பட்­டதை அடுத்து அவர் வைத்தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். எனி­னும் சிகிச்சை பய­னளிக்­காது அவர் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.
“கடந்த டிசெம்­பர் மாதம் விவ­சா­யி­யின் வளர்ப்பு நாய்க்­குட்டி அவ­ரைக் கௌவி­யது. அத­னால் நாய்க்­ குட்­டி­யின் பல்
 கீறி­யுள்­ளது. அவ்­வாறு கீறி­னா­லும் குருதி வர­வில்லை. சிறு கீறலே காணப்­பட்­ட­த­னால் அவர் கவ­னிக்­காது 
விட்­டு­விட்­டார்.
சில நாட்­க­ளின் பின் குறித்த நாய்க்­குட்டி அவ­ரது வீட்­டில் உள்ள பூனை உள்­ளிட்ட பிரா­ணி­க­ளைத் துரத்­திக் கடிக்­கத் தொடங்­கி­யது. அத­னால் நாய்க்­குட்­டி­யைப் பிடித்­துக் கட்­டி­யுள்­ள­னர். 3 நாள்­க­ளில் பின் நாய்க்­குட்டி 
இறந்­து­ விட்­டது.
சுமார் 4 மாதங்­க­ளா­கி­யுள்ள நிலை­யில் குறித்த விவ­சாயி தோட்­டத்­தில் பயிர்­க­ளுக்கு நீர் இறைத்­துக் கொண்­டி­ருந்­தார். தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர் பயத்தை உணர்ந்­தார். வீட்­டி­லும் தண்­ணீ­ரைக் கண்­ட­தும் அவர்
 பய­ம­டைந்­தார். 
வீட்­டி­லுள்­ள­வர்கள் அவ­ரின் செயற்பாட்டை அவ­தா­னித்­த­னர். அத­னால் அவரை மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் சேர்த்­த­னர். அவ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் அவரை உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­னர். 
அவ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­முன்­தி­னம் பிற்­ப­கல் 3.45 மணி­ய­ள­வில் அவர் உயி­ரி­ழந்­தார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
உடற்­கூற்­றுப் ­ப­ரி­சோ­த­னை­யின்­போது அவ­ருக்கு விலங்கு விசர் நோய்த் தொற்று ஏற்­பட்­ட­த­னால் இறப்பு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்டு உட­லத்தை நேற்று உற­வி­னர்­க­ளி­டம்
 ஒப்­ப­டைத்­தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக