இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக பதிவாகியுள்ளது.
இந்த காலப்பகுதியில் மட்டும் 25,530 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 16,140 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு பெருகும் இடங்களை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக