siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 10 நவம்பர், 2016

யாழில் 20 வயது பெண் பகலில் கடத்தல்- தந்தை பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர்
 தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை கல்யாணம் முடித்து தருமாறும் 
அவர் கேட்டுள்ளார்.
ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாக தந்தை தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஆவா குழு, கஞ்சா கடத்தல், கள்ள சாரயம் என்று பல விடையங்கள் அரங்கேறிய நிலையில். தற்போது ஆள்கடத்தல் கூட மிக சர்வசாதாரணமாக இடம்பெற்று 
வருகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக