நாட்டில் யாழ் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் பயணித்துள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இன்னொரு நபருமாக மூவர்
படுகாயமடைதுள்ளனர்.
இந் நிலையில் , விபத்து சிக்கியவர்களை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக