siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 22 ஜூன், 2019

தந்தை முறைப்பாடு வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் மாயமானதாக

சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில்
 இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
விஜயசுந்தர் தர்சன் வயது 19, விஜயசுந்தர் நிதர்சன் வயது 16 ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் தந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக