siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஜூன், 2019

விபத்தில் உடல் சிதறி யாழ் மிருசுவில் பகுதியில் பலியான பெண்

யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து, ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு மீண்டும் வீடு நோக்கி வருகையில், ரயில் பாதையினை கடக்கும் போதே விபத்து சம்பவித்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு, சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிருசுவில் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக