siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 மார்ச், 2024

பங்களாதேஷில் பரீட்சையின் போது மாணவனை துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்

 

பங்களாதேஷில் உள்ள மருத்துவப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரைஹான் ஷெரீப் விரைவில் கைது செய்யப்பட்டார், ஆனால் சம்பவம் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

காயமடைந்த மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டாக்டர் ஷெரீப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வடமேற்கு பங்களாதேஷில் உள்ள சிராஜ்கஞ்சில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 23 வயதான அராபத் அமின் டோமல் என்ற மாணவர், வாய்மொழி தேர்வில் ஈடுபட்டிருந்தபோது டாக்டர் ஷெரீப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சையின் போது, டாக்டர் ஷெரீப் துப்பாக்கியை எடுத்து மாணவனை நோக்கி, வலது முழங்காலில் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பொலிஸாரை மேற்கோள்காட்டி வங்காளதேச செய்தித்தாள் டெய்லி ஸ்டார் படி, புல்லட் திரு அமீனின் மொபைல் ஃபோனில், அவரது கால்சட்டையின் பாக்கெட்டில் தாக்கியதாக கூறப்படுகிறது, இது அவரது உயிருக்கு ஆபத்தான காயங்களைத் தப்பியது.என்பது குறிப்பிடத்தக்கது 








 

புதன், 6 மார்ச், 2024

நாட்டில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

நாட்டில்கலவான பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
 குறித்த மாணவி.06-03-3024. இன்று காலை தவறி விழுந்த நிலையில் அருகில் இருந்த கான்கிரீட் சுவர் மாணவி மீது மோதியுள்ளது. 
இதில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியே மேற்படி சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளார். 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 5 மார்ச், 2024

நாட்டில் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு

நாட்டில் மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான் (வயது-34) 
உயிரிழந்துள்ளார்.
 குறித்த விபத்தானது.04-03-2024. அன்று  திங்கட்கிழமைமாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் 
தெரிய வருகையில்,
 வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.என்பது  குறிப்பிடத்தக்கது 


திங்கள், 4 மார்ச், 2024

யாழ் வல்வெட்டித்துறை தீருவில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த மயானத்தில் திரண்ட மக்கள்

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் 
உயிரிழந்துள்ளார். 
 நேற்றுமுன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி, வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக வடமராட்சியை இன்று பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தது.
 வடமராட்சி கலிகைச்சந்தி, துன்னாலை, மந்திகை ஊடாக மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தை ஊர்திப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்து
 நெல்லியடி மத்திய பஸ் நிலையத்திற்கு பிற்பகல் 3மணிக்கு ஊர்தி வந்துசேர்ந்தது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் அஞ்சலி நிகழ்வில் வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மக்கள் பலர் ஒன்று கூடி
 அஞ்சலி செலுத்தினர். 
 அதனைத் தொடர்ந்து சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
தீருவில் மயானத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினார்கள்.
 சாந்தனின் வித்துடல்  இன்று அவரது சொந்த ஊரான உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு கிரியைகள் இடம்பெற்று எள்ளங்குளம் மைதானத்தில் தகனம் செய்யப்படும். என்பதாகும்











 

ஞாயிறு, 3 மார்ச், 2024

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையில் தீவிபத்து

நாட்டில் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.  
தீ விபத்தின் போது பள்ளியில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள் இருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், தீயினால் பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

சனி, 2 மார்ச், 2024

ஹரா பகுதியில் நேற்று பதிவான நிலசடுக்கம் அச்சத்தில் மக்கள்

ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 நிலநடுக்கம்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக 
பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் 
அச்சம் அடைந்தனர்.
குறிப்பாக நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த 
தகவலும் இல்லை.
மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது.
ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாது.என்பதாகும் 


 


 

வெள்ளி, 1 மார்ச், 2024

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக் குறியீடு

 தேசம் காண ஆசையோடு இருந்தவருக்கு இந்தி அதிகாரம் எமனானது என சாந்தனின் இறப்பு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 அந்த அறிக்கை வருமாறு: தமிழர் தேசக் கனவோடு தாயகம் 
பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி
 கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு,
 முழுமை பெறாத நீதி 
விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு 
தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை
 அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் 
சுதேந்திரராஜா எனும் இயற்பெயருடைய சாந்தன் அவர்களை விரைவில் 
நாடு திரும்புவார் எனும் தமிழர்களின் 
எதிர்பார்ப்பும் 
தாயையும் தாய் மண்ணையும் காண வேண்டும் என்னும் இறுதி ஆசையும் நிறைவேறாமலேயே அவர் உயிர்பிரிந்த செய்தி தமிழர் இதயங்களைக் க
னக்க வைத்துள்ளது. 
 பெற்ற மகனை ஒரு முறையாவது உயிருடன் பார்த்து விட வேண்டுமென்ற தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான 33ஆண்டுகள் பாசப் போராட்டத்தில் சாந்தன் அவர்களின் இழப்பு அனைவரையும் வெடித்தழ 
வைக்கின்றது. இறப்பு நிகழ்ந்த 28ஆம் திகதி காலையில் கூட மகன் வருவான்
 என்று கோவில் தீர்த்தத்துடன் காத்திருந்த தாய்க்கு வாழ்நாள் ஏக்கம் கனவாய்ப் போனது பெருந்துயர்! 
 ஏதும் அறியா இளைஞனாக தமிழகம் வந்தவரை மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாகச் சிறைப்படுத்தி, சித்திரவதை செய்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களின் பின்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றம் விடுதலை
 செய்த பின்னரும்
 இயற்கை நீதிக்கு முரணாக தொடர்ந்து 15 மாதகாலம் திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பில் வைத்திருந்து உடல், உள ரீதியாய் பலவீனப்படுத்தி 
சிறுகச் சிறுகச் கொன்று தாயையும் தாய் மண்ணையும் காண ஆவல் கொண்டிருந்தவரை இன்று உயிரற்ற சடலமாய் அனுப்பி 
வைத்திருக்கிறது இந்தியம். 
 பாரத தேசத்தின் பிராந்திய நலன்களிற்கு எதிராகச் செயற்பட்டு தொடர்ந்தும் அவமதித்து வரும் சிறிலங்கா அரசுடன் நட்புப் பாராட்டும் காந்தி தேசம், தங்களின் அற்ப பூகோள நலன்களிற்காக தங்களை நோக்கி
 என்றுமே நேசக்கரம் நீட்டும் ஈழத்தமிழ் மக்களைத் வஞ்சிப்பதென்பது அந்த நாடு இதுவரைகாலமும் தான் கொண்ட வரலாற்றிற்கும் பெருமைகளிற்கும் இழுக்கானதாகும். 
அன்று முதல் இன்று வரை காந்தியின் பெயர்கொண்டு, புரியும் கொடுரங்களால் தனக்கு மேல் போர்த்திய போர்வை களைந்து நிர்வாணமாய் நிற்கின்றது காந்தி தேசம். நேற்று வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற 
வாதங்களில்
 தமிழக அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி தமிழக அரசே 
சாந்தன் அவர்களை விடுவிப்பதில் காலந்தாழ்த்தியது எனும் துயரச் செய்தி, எமக்காய் தமிழக உறவுகளும் தமிழக அரசும் நிற்பார்கள் 
என்று நம்பும் ஈழத்தமிழ் மக்களிற்கு துரோகச் 
செய்தியாய்ப் போனது
 இன்னுமொரு பெருந் துயரம்! சாந்தன் அவர்களைத்
 தாயகம் அழைத்து வருவதற்கு இறுதி ஒரு மாதகாலத்திற்குள் காணப்பட்ட ஏதுநிலையை குறிப்பிட்ட சில காலங்களிற்கு முன்னதாகவேனும் உருவாக்கிட
 நடவடிக்கை ஏதும் எடுத்திருந்தாற் கூட பெற்ற தாயைக் 
காண வேண்டும் எனும் இறுதி ஆசையையேனும் நிறைவேற்றிக் கொடுத்திருந்திருக்கலாம். 
ஆனால், ஏழு தமிழர்கள் இந்திய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒன்றாண்டு காலப்பகுதிக்குள் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டாக ஒரு தீர்க்ககரமான தீர்மானங்களெதனையும்
 மேற்கொள்ளாது, அசமந்தமாகவும் அலட்சியப் போக்குடனும் செயற்பட்டமை 
என்பது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதொன்று.
 நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் 
இயற்கை நீதிக்கு
 விரோதமாக சிறப்பு சித்திரவதை முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ளவர்களையும் விடுதலை செய்து ஈழத்தமிழர்களை சிதைத்தெடுக்கும் சித்திரவதை முகாமிற்கு இனியாவது முடிவுரையெழுத இந்திய ஒன்றிய, மாநில அரசுகளை 
வேண்டுகின்றோம். 
 ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு, தாயகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்களை அழைத்து வர இனியாவது உரிய நடவடிக்ககை 
எடுக்குமாறு ஈழத்தமிழ் அரசியல் தரப்புக்களையும் சிறிலங்கா, இந்திய அரசுகளையும் வலியுறுத்துகின்றோம். 
 நீதியைக் காத்து நிலைநாட்டுவதில் பக்கம் சாராமல் இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களின் விடுதலைக்கான காலம் வரையில் காலத்திற்குக் காலம் எத்தனையோ 
வாய்ப்புக்களை வழங்கியும் இந்திய ஒன்றிய அரசும் 
தமிழக அரசும் தொடர்ச்சியான சட்ட செயற்பாடுகளின் மூலம் தாமதப்படுத்தியமை என்பது ஈழத்தமிழ் மக்களின் மீதான கசப்புணர்வையே வெளிப்படுத்தியிருப்பதாகவே எண்ணத்
 தோன்றுகின்றது. 
இனிமேலாவது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளிற்கு விரோதமான செயல்களிற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உளச்சுத்தியுடன் இந்திய அதிகாரம் செயற்பட வேண்டுகின்றோம். 
 உயிரோடு வந்தவரை இன்று உயிரற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம்! சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு! – என்றுள்ளது
என்பதாகும் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி


வியாழன், 29 பிப்ரவரி, 2024

இலங்கைக்கு நாளைய தினத்திற்கு பின்னரே சாந்தனின் உடல் வரப்படும்

இந்தியாவில்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் 
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த தகவலை சாந்தனின் சகோதரர் தனது சமூக வலைத்தள தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 மேலும், தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் அவர் இதற்கு முன்னர் கோரிக்கை
 விடுத்திருந்தார்.
 இதேவேளை பிரேத பரிசோதனைகளின் பின்னர் ,இன்று சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை என்பதாகும்


புதன், 28 பிப்ரவரி, 2024

பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள் பாரம் துாக்கியில் சிக்கித்தவித்துள்ளனர்

பிரான்ஸ்  ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கோபுரத்துக்கு நடுவே சிக்குண்டு இரவு முழுவதும் தவித்துள்ளனர். இச்சம்பவம் இடம் பெற்று பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன.
 ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பயணிபுரியும் ஊழியர்கள் மூவர், பெப்ரவரி 16 - 17 ஆம் திகதிக்குட்பட்ட இரவில், கோபுரத்தில் இருந்து கீழே இறக்க முற்பட்டனர். பாரம்தூக்கியில் அவர்கள் கீழிறங்க 
முயற்சித்த வேளையில் அவர்கள் பாரம்தூக்கிக்கிக்குள் 
சிக்கிக்கொண்டனர். 
பாரம் தூக்கி இயங்க மறுத்தது. அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை அவர்கள் அங்கு சிக்கிக்கொள்ள நேர்ந்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்ட போதும், மீண்டும் பணி மிகுந்த சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கரை மணிநேரங்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது  


செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில் தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில்.26-02-2024. திங்கட்கிழமை இரவு வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.
வீட்டார் , அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காததால் யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .
குறித்த தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .
என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 26 பிப்ரவரி, 2024

நாட்டில் அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

நாட்டில் அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
இவர்களில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
அம்பாறை உதெனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 






 

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கடைக்கு முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு யாழில் தீவைப்பு

யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீமூட்டி எரிக்கப்பட்டது.  
தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உருட்டிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் 
பதிவாகி உள்ளது. 
முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புபட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதாகும் 





 

சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் வட்டவளையில் சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் கைது

நாட்டில் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் (22) அன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை 
பொலிஸார் தெரிவித்தனர்.
 வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்ட வட்டவளை பொலிஸார் துணி ஒன்றில் சுத்தி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் 
சடலத்தை மீட்டுள்ளனர். 
அதேநேரத்தில் இந்த சிசுவை பெற்ற தாய் தலைமறைவாகிருந்த நிலையில் அவரை கொழும்பில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அந்த பெண்ணின் கணவர், மகள் ஒருவர் மற்றும் குழி பறிக்க உதவிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார 
தெரிவித்தனர். 
இந்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த தாய் டயகம பிரதேசத்தை சேர்ந்த (37) வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சிசு முறைக்கேடாக பெற்றெடுக்கப்பட்ட சிசுவா? சிசு பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பகுதியில் குழி பறித்து புதைக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர். 
அதேநேரத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிசு புதைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார் சிசுவின் உடல் குழைத்து அதன் பாகங்கள் சிசுவின் உடல் பாகங்கள் உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது 






 

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

ஆதாரம் இல்லாததால் உலகின் வயதான நாய்க்கு வழங்கப்பட்ட சாதனை பட்டம் பறிப்பு

போபி என்ற நாயின் உண்மையான வயது தொடர்பான சர்ச்சையின் காரணமாக, உலகின் மிக வயதான நாய் என்ற பட்டம் மரணத்திற்குப் பின் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்ட பட்டத்தை வழங்குவதற்கு, போபியின் வயதை நிரூபிக்க மைக்ரோசிப் போதுமான ஆதாரம் இல்லை என்று அமைப்பு தெரிவித்துள்ளது.
எந்த நாய் புதிய சாதனை படைத்தது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று GWR கூறியது. போபி போர்ச்சுகலின் கான்குவீரோஸைச் சேர்ந்த ரஃபீரோ டோ அலென்டெஜோ ஆவார்.
இனம் பொதுவாக 12-14 ஆண்டுகள் வாழ்கிறது. ஆனால் போபிக்கு விருது வழங்கப்பட்டபோது, அவருக்கு 30 வயது என்று கூறப்பட்டது. போபி அக்டோபர் 2023 இல் 31 வயது மற்றும் 165 நாட்களில் இறந்தார்.
ஆனால் போபியின் வயதை நிரூபிப்பதில் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் தலைப்பை நிரூபிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் குறித்து GWR விசாரணையைத் 
தொடங்கியது.
 “பாபியின் பிறந்த தேதியை உறுதியாக நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரம் எங்களிடம் இல்லை என்று GWR கூறினார்என்பது குறிப்பிடத்தக்கது 


வியாழன், 22 பிப்ரவரி, 2024

குறுந்தொகை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் வைத்தியசாலையில்

நுவரெலியாவில் நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தளையில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது.
 விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 







 

புதன், 21 பிப்ரவரி, 2024

நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பநிலை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
நாளை வியாழக்கிழமை வடமேற்கு மாகாணம், கம்பஹா, கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டம் மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது     

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

அகதிகள் படகு துனிசியாவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் பலி

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற லிபிய நாட்டின் கடற்கரையில் இருந்து ஐரோப்பாவுக்கு சிலர் படகு ஒன்றில் பயணம் 
மேற்கொண்டனர். 
அந்த படகில் பாகிஸ்தான், எகிப்து, சிரியா மற்றும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களும் பயணித்து உள்ளனர்.
மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த அகதிகளின் படகு துனீசியா கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 
படகில் 53 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது. பலரின் நிலைமை என்னவென தெரியவில்லை. இதுபற்றி வங்காளதேச அரசு வெளியிட்ட செய்தியில், வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என தெரிவித்து உள்ளது. 
இதனை அந்நாட்டு வெளிவிவகார துறை உறுதிப்படுத்தியது. அவர்களில் 5 பேர் வங்காளதேச நாட்டின் மதரிப்பூர் மற்றும் 3 பேர் கோபால்கஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். 
உயிரிழந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது




 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

நாட்டில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் மோதி பெண் ஒருவர் உள்பட இரு குழந்தைகள் பலி

நாட்டில் ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 
குறித்த விபத்து சம்பவம்.19-02-2024. இன்று  பிற்பகல்  
இடம்பெற்றுள்ளது. 
தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலுடன்  மோதி விபத்துக்குள்ளானது.  
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 





 

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நாட்டில் ஹட்டனில் யாத்திரைக்கு வந்த பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

நாட்டில் ஸ்ரீபாத யாத்திரைக்கு வந்தவர்கள் பயணித்த வேனும், பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் 
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த விபத்து இன்று (18.02) பிற்பகல் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குனிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில்
 இடம்பெற்றுள்ளது. 
கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை
 ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேன வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளனர்.  
வேன் முன்னால் சென்ற லொறியை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .என்பதாகும்.


 


 

சனி, 17 பிப்ரவரி, 2024

ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு

தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். 
மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.