siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு


வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது.

பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும், தொழிற்சாலைக்கு வெளியில் 35 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மண் மற்றும் நீரில் அமிலத்தின் செறிவு அதிகாமாகக் காணப்படுவதுடன் ஐட்ரஜன் மற்றும் பி.எச் பெறுமானங்கள் குறைவாககக் காணப்படுவதாக பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தின் தலைவர் செனரத் ஜயசுந்தர தெரிவித்தள்ளார்

இதேவேளை, குறித்த பிரதேச நீர் தொடர்பில் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக நீர் வளச் சபை அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக