siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 11 அக்டோபர், 2016

வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆர்வம்!

உள்நாட்டிலேயே மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய 28 வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் இவ்வாறு உற்பத்தி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 28 நாடுகள் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
இந்த 28 வெளிநாட்டு நிறுவனங்களில் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் இரண்டு நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கையில் மருந்துப்பொருள் உற்பத்தி செய்வது குறித்த உடன்படிக்கையில் 
கைச்சாத்திட்டுள்ளது.
இன்னும் ஓராண்டு காலப்பகுதியின் பின்னர் இந்த நிறுவனங்கள் மேற்கத்தைய மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளது.
இலங்கையில் மருந்துப் பொருள் உற்பத்தி செய்ய உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்காலத்தில் உற்பத்திசாலைகளை 
அமைக்க உள்ளன.
உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்கள் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட உள்ளதுடன், எஞ்சிய மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக