siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இரண்டு இலங்கை பெண்கள் உயிரை பலியெடுத்த 'செல்பி'!!!

ஓமான்  மான்சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த  இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர்
இதன்போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும் , குறித்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக