siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வரும் வருடங்களில் இலங்கையில் பாரிய மின்சார பற்றாக்குறை ஏற்படும்?

இலங்கையில் அடுத்த வரும் வருடங்களில் பாரிய மின்சார பற்றாக்குறை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்ரேந்து பகுதிகள் வற்றியுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடிக்குமாயின் மின்விநியோகம் சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் நாட்டுக்கு தேவையான மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 50 சதவீதமான மின்சாரம் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழை கிடைக்காவிட்டாலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மழை கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நாடு மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் திட்டமிட்ட அடிப்படையில் உத்தேச புதிய மின்சார நிலையங்களை ஆரம்பிப்பது அவசியம் என சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய பாரிய எட்டு மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிராந்திய மாநிலமான தமிழகத்தில் மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையிலான மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அப்படியானதொரு பாதகமான நிலை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்படும் மேலதிக மின்சார அலகுகளை சார்க் பிராந்திய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் மின்சார பாவனையில் தட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்த மேலதிக மின்சார அலகுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்னிமாக்கப்பட்டது.
முழு நாட்டுக்கும் ஒளி - இருளில் இருந்து விடுதலை என்ற தொனிப்பொருளின் கீழ் மின் உற்பத்தி நடவடிக்கைகள் உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக