siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 1 மே, 2018

வந்துராகல பகுதியில் கோர பஸ் விபத்து 25 பேர் படுகாயம்

குருநாகல், வந்துராகல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு,
 காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே குருநாகல் பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும், 
குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக