siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 மே, 2022

நாட்டில் பல்பொருள் அங்காடிகள் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை இலங்கையின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருளான அரிசி தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று 
இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி அடுத்த வாரம் முதல் பல்பொருள் அங்காடிகள் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் குறித்த அரிசி கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது நுகர்வோர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோகிராம் அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விநியோகிக்கப்படும் அரிசி வகைகளின்
 சில்லறை விலை
ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 145 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 175 ரூபா என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக