siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 20 மே, 2022

நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் சுமார் 45,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் மேலும் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 17ஆம் திகதி 2800 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு கப்பல் ஒன்று 
நாட்டை வந்தடைந்த போதிலும் சீரற்ற காலநிலையினால் அவற்றை இறக்கிக் கொள்ள முடியவில்லை என அவர்
 தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாள்தோறும் தலா 80000 சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக