siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 11 மே, 2022

பெரிய நீலாவணை கடலில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் சிக்கினர்

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன், அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 10-05-2022.அன்று   மாலை 5.30 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது.
சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், அதனையும் பொருட்படுத்தாது நீச்சலில் ஈடுபட்டுள்ளனர்.
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவரை அலை இழுத்து சென்ற நிலையில், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு
 காணாமல் போயுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு, தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் 
இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக