siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 9 ஜனவரி, 2023

முகநூலினால் யாழில் நடந்த துயரம்..இறுதியில் உயிரினை விட்ட இளம் யுவதி


யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில்
 தெரியவருகையில்,
யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார். உயிரிழந்த காதல் தோல்வியால் மன உளைச்சலிற்குள்ளாகியிருந்ததால் தற்கொலை செய்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் அவரது மரணத்திற்கு பேஸ்புக் காதலன்தான் காரணமென குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் வழியாக உறவு ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். யாழ் நகரையண்டிய பகுதிகளில் சில ஆதனங்களும் குடும்ப த்தினருக்கு 
சொந்தமாக காணப்பட்டன.
யுவதியின் வற்புறுத்தலின் பேரில் ஆதனமொன்றை விற்பனை செய்து, காதலனிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் காதலன் வெளிநாடு செல்வதாக குறிப்பிட்டு, மலேசியாவில் தங்கியிருந்துள்ளார்
.மலேசியா சென்ற சில மாதங்களின் பின்னர் யுவதியுடனான தொடர்பை, பேஸ்புக் காதலன் நிறுத்திக் கொண்டதக்க கூறப்படுகின்றது.
இந்நிலையில் யுவதி தற்கொலை செய்து கொண்ட
தையடுத்து, பேஸ்புக் காதலனிற்கு எதிராக, யுவதியின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக
 கூறப்படுகின்றது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

ஏறாவூரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் கடலில் மூழ்கி மரணம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் எதிர்வரும் 23ஆம் திகதி ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த நிலையிலேயே இவ்வாறு பரிதாபகரமாகச் 
சாவடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
ஏறாவூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவனான மனாப்தீன் அப்துர் ரஹ்மான் (வயது 19) என்பவர் நேற்று குடும்ப சகிதம் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைக்குச் 
சென்றுள்ளனர்.
அப்போது குறித்த மாணவர் தன் சகோதரருடன் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையால் இருவரும் அள்ளுண்டு
 சென்றுள்ளனர்.
பின் மற்றுமொரு அலையினில் இருவரும் கரைக்கு வந்த போது குறித்த மாணவன் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் அவரது சகோதரர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 7 ஜனவரி, 2023

சுவிசில் ஆரோ கன்டோனில் 42வயது பெண்ணின் கழுத்தை திருகிய நபர் தப்பியோட்டம்

சனிக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒரு பெண்ணைத் தாக்கியதில், அவர் லேசான காயம் அடைந்தார். உள்ளூர்வாசிகள் அவளுக்கு உதவி செய்ய ஓடினர். எனினும், குற்றவாளி 
தப்பியோடிவிட்டார்.
ஆர்காவ் கன்டன் காவல்துறையின் அறிக்கையின்படி, 42 வயதான பெண் ஒருவர் சனிக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ரைன்ஃபெல்டனில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பழைய நகரத்தின் திசையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
Habich-Dietschy-Strasse உயரத்தில், அவளை ஒரு அறியாத மனிதன் அணுகினான். அவர் பாதிக்கப்பட்டவரைப் பிடித்து மூச்சுத் திணற வைத்தார். பாதிக்கப்பட்டவர் வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைத் தற்காத்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். குடியிருப்பாளர்கள் உதவிக்கு விரைந்தனர். இந்த தாக்குதலில் பெண்ணுக்கு லேசான 
காயம் ஏற்பட்டது.
அறியப்படாத குற்றவாளி பழைய நகரத்தின் திசையில் தப்பி ஓட முடிந்தது. தேடப்படும் நபர் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர், சுமார் 1.70 மீட்டர் உயரம் கொண்டவர், கருமையான முடி, தடகளம் மற்றும் 
மொட்டையடிக்கப்பட்டவர். குற்றம் நடந்தபோது அவர் நீல ஜீன்ஸ், கருப்பு, பளபளப்பான, லைட் டவுன் ஜாக்கெட் மற்றும் வெள்ளை ஸ்னீக்கர்களை 
அணிந்திருந்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 6 ஜனவரி, 2023

வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கந்தசாமி பன்னீர்செல்வம் என்ற 56 வயது நபரின் சடலமே 
மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது குறித்த நபரின் சடலம் சமையலறையில் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி 2004 ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் இவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளதாகத்
 தெரியவருகிறது.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 5 ஜனவரி, 2023

தமிழகத்தில் இலங்கை யுவதியொருவர் பின்னால் வந்த லொறி மோதி உயிரிழப்பு

தமிழகத்தில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் போரூர் லட்சுமி நகரில் வசித்து வருகிறார்கள். மகள் ஷோபனா (23) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு 
சாலையில் விழுந்தார்.
அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார்.இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் பலியான அக்காவின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.விபத்து நடந்ததும் லொறியை நிறுத்திவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார்.தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாரதியை தேடி வருகின்றனர்.மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பாடசாலையிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். 04-01-2023.அன்று காலை பாடசாலைக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்கா ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை 
காவு வாங்கிவிட்டது.
மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். நேற்றைய விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், சல்லிகள் கொட்டி 
சீரமைக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 4 ஜனவரி, 2023

அலபாமா விமானத்தின் என்ஜினுக்குள் சிக்கி விமான நிலைய ஊழியர் உயிரிழப்பு

அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. 
விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது. 
ஆனால் அதன் பின்னரும் விமானத்தின் ஒரு என்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. இதனை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர் அந்த விமானத்துக்கு அருகே சென்றார். 
அப்போது அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சிக்கிக்கொண்டார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி 
அவர் பலியானார். 
இந்த கோர சம்பவத்தால் அலபாமா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சக ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.31-12-2022. சனிக்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை
 நடத்தி வருகிறது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 3 ஜனவரி, 2023

இரண்டு ஹெலிகாப்டர்கள் ஆஸ்திரேலியாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் தீம் பார்க்கின் அருகில் இரு  ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டதில் நான்கு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் இருக்கும் சீ வேர்ல்ட் என்ற தீம் பார்க்கிற்கு அருகில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் தற்போது வரை நான்கு நபர்கள் பலியானதாக கூறப்பட்டிருக்கிறது. மூன்று நபர்கள் பலத்த காயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளி விடுமுறையை கொண்டாட பூங்காவில் மக்கள் கூடி இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஏழு பயணிகளுடன் சென்ற ஒரு ஹெலிகாப்டர் தரை இறங்கக்கூடிய சமயத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி விட்டது.
அதில் ஆறு நபர்கள் இருந்ததாக தெரியவந்திருக்கிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இருவர் பிரிட்டனை சேர்ந்த தம்பதி என்று தெரிய வந்திருக்கிறது. அவர்கள் கடந்த 2021-ஆம் வருடத்தில் தான் திருமணம் 
செய்திருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திரு முத்தையா சத்தியநாதன் (முத்தா) 02.01.2023

தோற்றம்-15-02-1957-மறைவு-02-01- 2023
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை 
வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சத்தியநாதன் (முத்தா) அவர்கள்.இலங்கையில்  02-01-2023 திங்கட்கிழமை 
அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை பறுவதபத்தினி
 தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி 
அவர்களின் அன்புக் கணவரும்,சுரேந்திரன்(சுவிஸ்), சுஜிதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுரேந்தினி(சுவிஸ்), 
றஞ்சிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சறோஜினி(பிரான்ஸ்), விமலாதேவி, 
சச்சிதானந்ததேவி, தவானந்தன்(லண்டன்), இராமநாதன், ஜீவானந்தன்(சுவிஸ்), பிரபா(தேவி படமாடம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆயிஷா, றயன், சவீன், அறோன் 
ஆகியோரின் அன்புப் பேரனும்,தேவராசா(சுவிஸ்), முகுந்த விக்னேஸ்வரி(சுவிஸ்), நித்தியானந்தன், வசந்தேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 வீடு - குடும்பத்தினர்Mobile : +94212221312 சுரேந்திரன் - மகன்Mobile : +41765762305 சுஜிதரன் - மகன்Mobile : +41763889544 இராமநாதன் - சகோதரன்Mobile : +94770641104 பிரபா - சகோதரன்Mobile : +94776099071 தவானந்தன் - சகோதரன்Mobile : +447824344594 ஜீவானந்தன் - சகோதரன்Mobile : +41779843972

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 2 ஜனவரி, 2023

லோலுகொட பிரதேசத்தில் தாய் கொடுத்த விஷத்தை அருந்திய 5 வயது மகன் பலி! - தாயும், மற்றொரு மகனும் வைத்தியசாலையில்


தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான  சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் 
தெரிவிக்கின்றனர்.
கம்பஹா, நால்ல - லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக 
கம்பஹா - நால்ல
தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய தாயொருவர் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை
 பெற்று வருகின்றார்.
தாயினால் விஷமூட்டப்பட்ட, எட்டு வயதான மற்றைய பிள்ளை கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 1 ஜனவரி, 2023

நாட்டில் 100,000க்கு மேல் மாத வருமானம் பெறுபவர்களுக்கு இன்று முதல் வரி

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வருமான வரி விதிக்கப்படும்.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதாந்தம் 100,000 ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் அனைத்து மக்களும் குறைந்தபட்சம் 6 வீதத்திலிருந்து அதிகபட்சமாக 36 வீதம் வரையான வரிகளை செலுத்துவதற்கு பொறுப்பாவார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் 100,000 க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்து எப்படி வரி வசூலிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழலில் இவ்வாறான வரிக் கொள்கையைப் பின்பற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க 
தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் டிசம்பர் 9ஆம் திகதி பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 19ஆம் திகதி குறித்த சட்டமூலத்திற்கு தனது சான்றிதழை பதிவு செய்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 31 டிசம்பர், 2022

நியூசிலாந்தில் முதல் புத்தாண்டு பிறந்தது வான வேடிக்கைகளுடன் வரவேற்பு -

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை
 வரவேற்றனர். 
உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 30 டிசம்பர், 2022

ஐந்துபேர் கயாம் வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது

வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு குவியலாக இருந்தது. இந்த சம்பவத்தை லூசர்ன் போலீசார் உறுதி செய்தனர். தற்போது நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளது. 20 கார்கள் குவியலில் ஈடுபட்டுள்ளன. 5 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியை பெரிய அளவில் பைபாஸ் செய்யுமாறு போலீசார் கேட்டுக் கொள்கின்றனர். நண்பகல் வேளையில், கார்களை சாலையில் இருந்து அகற்றும் பணியில் 
போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
இது மிகவும் மோசமாக இருந்தது." விபத்து நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவில் நான்கு மணி நேரம் தனிவழியில் சிக்கிக் கொண்டுள்ளனர். பிராஸ்லரின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான வாகனங்களில் பாதி இப்போது அகற்றப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து தற்போது எந்த தகவலையும் தெரிவிக்க முடியாமல் போலீசார் கூறியுள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 29 டிசம்பர், 2022

அம்மா மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கான காரணம் இதுதானாம்..

கடவுளால் இந்த உலகின் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் அவா் அன்னையரைப் படைத்தாா் என்று முதுமொழி ஒன்று கூறுகிறது. நமது வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பாா்க்கும் போது, இந்த முதுமொழி எவ்வளவு உண்மை என்பது 
நமக்குத் தொியும்.
நமது அன்னையா் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்ததோடு அமைதியாக இருந்துவிடுவதில்லை. மாறாக நமக்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக அவா்கள் அளவிட முடியாத 
அளவிற்கு ஏராளமான தியாகங்களைச் செய்து வருகின்றனா். நமக்காக பலவிதமான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அனுபவிக்கின்றனா்.
தனது குழந்தை ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு தாய் தன்னால் முடிந்த 
எல்லாவற்றையும் செய்கிறாா். ஆகவே அன்னையாின் தாய்மையைப் போற்றும் விதமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது 
ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையா் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மே மாதம் 9 அன்று அன்னையா் தினம் 
கொண்டாடப்படுகிறது
இந்த அன்னையா் தினமானது, நமக்கெல்லாம் நமது அம்மாக்கள் எந்த அளவிற்கு முக்கியமானவா்களாக இருக்கின்றனா் என்பதை உணா்த்தும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக அன்னையரைப் பற்றி எவ்வளவு தான் பெருமையாக பேசினாலும் அல்லது அவா்களின் சிறப்புகளைப் பற்றி மனம் உருகி பேசினாலும் அது போதுமானவையாக 
இருக்காது. 
இருந்தாலும் அன்னையாின் ஒரு சில முக்கிய சிறப்புகளை இந்த பதிவில் குறிப்பிடுவது அன்னையா் தினத்திற்கு நாம் செய்யக்கூடிய 
மாியாதையாக இருக்கும்.
எல்லாம் அறிந்தவா் அன்னைநமது முகத்தை பாா்த்த அடுத்த நொடியே, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் அறிந்துவிடுவாா் நமது அன்னை. நமது உணா்வுகள் மற்றும் மனநிலைகளை எவ்வளவு தான் கடினப்பட்டு மறைக்க முயற்சி செய்தாலும், அவா் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவாா். 
அவரைப் போன்று
வேறு யாராலும் நம்மைப் பற்றித் தொிந்திருக்க முடியாது. நமக்கு என்ன பிடிக்கும் அல்லது என்ன பிடிக்காது போன்ற சிறுசிறு காாியங்களையும் நமது அன்னை தொிந்து வைத்திருப்பாா். அதற்கு காரணம் நமது அன்னை நமது உயிாில் எப்போதும் கலந்து இருப்பாா்.
நிபந்தனையற்ற அன்பை வாாி வழங்குபவா் அன்னைஒரு தாய் தனது குழந்தைக்கு வழங்கும் அன்பில் எந்தவிதமான எல்லையும், கட்டுப்பாடும் இருக்காது. ஒருவேளை அந்த குழந்தை வளா்ந்துவிட்டாலும் அந்த தாயின் அன்பில் மாற்றமே இருக்காது. சில நேரங்களில் நமது அம்மா எாிச்சலுடன் இருப்பதை நாம்
பாா்த்து இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்திலும்கூட, நம்மை எந்த விதமான எதிா்பாா்ப்பும் இல்லாமல் அன்பு செய்வாா். நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும், அவற்றை உடனே மன்னித்து, நம்மீது தூய்மையான அன்பைப் பொழிவாா். தனது குழந்தை எப்போதும் மகிழ்ச்சயாக இருக்க வேண்டும் என்றே அந்த அன்புத் தாய் விரும்புவாா்.
நமது முதல் ஆசிாியா் நமது அன்னைநாம் உச்சாிக்கும் முதல் வாா்த்தையிலிருந்து, நாம் படிக்கும் வாழ்க்கைப் பாடங்கள் வரை, நம்முடைய முதல் ஆசிாியராகவும், நமது ஆகச் சிறந்த ஆசிாியராகவும் இருப்பவா் நமது அன்னையே. அவா் நம்மை கருத்தாங்கி இருக்கும் போது 
பலவகையான நல்ல
புத்தகங்களையும், ஆன்மீகப் புத்தகங்களையும் வாசித்திருப்பாா். மேலும் பல நல்ல காாியங்களைப் பற்றி எழுதி இருப்பாா். அதற்கு முக்கிய காரணம் தனது குழந்தை நல்ல முறையில் வளா்ந்து, இந்த உலகத்தோடு அருமையான தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
 உயா்ந்த எண்ணமே.
நமது அன்னை நமக்கு நல்ல ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்கள் போன்றவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சந்திப்பது மற்றும் நம்மோடு போட்டி போடுபவா்கள் மத்தியில் நாம் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பவற்றையும் நமக்குக் கற்றுத் தருகிறாா். மேலும் நமக்கு இருக்கும் திறமைகளை நமது அன்னை அறிந்து இருக்கிறாா். அந்த திறமைகளை பட்டை தீட்டி அதை வெளிக் கொணா்வது நமது 
அன்னையே.
4. நம்மை ஊக்கமூட்டும் சக்தி நமது அன்னைஅன்னையா் இல்லை என்றால், இந்த உலகில் நம்பிக்கை என்ற ஒரு அம்சமே இருக்காது. நமது வாழ்க்கையில் ஏற்படும் கடினமான நிகழ்வுகளை மற்றும் யதாா்த்தங்களை
 தைாியமாக சந்திப்பதற்கு,
நமக்கு வலிமையை அளிப்பவா் நமது அன்னையே. அவா் தனது வாழ்க்கை அனுபவங்களை மட்டும் பகிா்வதில்லை. அதோடு நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் ஊக்கத்துடனும், தைாியத்துடனும் எதிா் கொள்ள நமக்கு ஊக்கமூட்டுகிறாா். நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் 
உறுதியாக இருக்கிறாா்.
5. நம்மை எப்போதும் நம்புபவா் நமது அன்னைஇந்த உலகமே நம்மை எதிா்த்து நின்று, நமது திறமைகளின் மீது நம்பிக்கை வைக்க மறுத்தாலும், நமது அன்னை எப்போதுமே நம் மீதும், நமது திறமைகளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பாா்.
ஒரு தாய் தனது குழந்தையைப் பற்றி நன்கு அறிந்திருப்பாா். அதனால் அவா் எந்தச் சூழ்நிலையிலும், தனது குழந்தையிடம் இருக்கும் திறமைகள், முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் 
மீது நம்பிக்கை இழப்பதில்லை. இந்த உலகம் நம் மீது எவ்வளவு விமா்சனங்களை அள்ளித் தெளித்தாலும், நமது அன்னை 
நம் மீது நம்பிக்கை வைத்து, நாமும் நம் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நம்மை ஊக்கமூட்டுவாா்.
6. எல்லா பிரச்சினைகளுக்கும் தீா்வு வைத்திருப்பவா் நமது அன்னைநமக்கு தோ்வு காலமாக இருக்கலாம் அல்லது முக்கியமான 
கூட்டங்கள் அல்லது விழாக்களுக்கு எப்படிப்பட்ட உடைகளை அணிவது என்று நாம் குழம்பிப் போய் நிற்கலாம். ஆனால் நமது அன்னை அதற்கு தீா்வு ஒன்றை வைத்திருப்பாா். நமது வாழ்க்கையில்
 நாம் சந்திக்க
வேண்டிய பிரச்சினைகளை நமக்கு விவாிப்பாா். அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிா் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்குக் கற்றுக் கொடுப்பாா். குறிப்பாக நம்மைப் பற்றி மற்றவா்கள் தீா்ப்பிடும் போதும் அல்லது 
நம்மை பிறா் விமா்சிக்கும் போது நாம் எவ்வாறு 
எதிா்வினை ஆற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பாா். எந்த ஒரு அன்னையும் தனது குழந்தை தனியாகத் துன்பப்படுவதைப் பாா்த்துக் கொண்டு இருக்கமாட்டாா். மாறாக தனது குழந்தையின் பிரச்சினைகள் தீரும் வரை, அந்த குழந்தையோடே இருப்பாா்.
7. நம்மிடம் உள்ள சிறந்தவற்றை வெளிக் கொணா்பவா் நமது அன்னைசில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வேலையை நம்மால் செய்ய 
முடியாது அல்லது அந்த வேலையைச் செய்ய நாம் தகுதியற்றவா்கள் என்று நம்மையே நாம் குறைவாக மதிப்பிட்டு, பதட்டமாக
 இருப்போம். அந்த நேரங்களில் நமது அம்மா நமது
 அருகில் இருந்தால், 
அந்த பதட்டம் மறந்து, நாம் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்போம். ஏனெனில் நமது அன்னை நமது அருகில் இருந்தால், அவா் நம்மிடம் இருக்கும் சிறந்தவற்றை மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடுவாா்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 28 டிசம்பர், 2022

சீனாவில் தெளிவற்ற காலநிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல் பலர் காயம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து 
ஏற்பட்டு உள்ளது.
இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக அந்த பாலத்திற்கு சென்றுள்ளனர். பலர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி
 நடந்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 27 டிசம்பர், 2022

கொரோனா மரணங்கள் இலங்கையில் மீண்டும் பதிவாகியுள்ளன

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் 26-12-2022.அன்று  பதிவாகியுள்ளன.  இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து 
வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 26 டிசம்பர், 2022

கூகுலில் பட பேட்ஜின் மூலம் தொடர்புடைய இணைய தளங்களை கண்டறிவது எப்படி

பட பேட்ஜின் மூலம் படத்தின் இணையப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தின் வகையை நீங்கள் அறியலாம்.
Googleளில் படங்களைத் தேடும்போது சில படங்கள் பேட்ஜ்களுடன் இருக்கும். உதாரணமாக, தயாரிப்புகளுக்கு தயாரிப்பு, ரெசிபிகளுக்கு ரெசிபி மற்றும் வீடியோக்களுக்கு வீடியோ. இந்த பட பேட்ஜ்கள் இணையத்தில் 
நீங்கள் என்ன வகையான உள்ளடக்கம் தேவை என்பதை கண்டறியலாம்.
உதாரணமாக, ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியைக் கண்டறிய
 விரும்பினால்:
"ரெட் வெல்வெட் கப்கேக்" என்று தேடவும்.
ரெசிபி ரெசிபி பேட்ஜ் உள்ள படத்தைக் கண்டறியவும்.
படத்தின் கீழ் உள்ள இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படத்தின் பரிமாணங்களைக் கண்டறிதல்
கம்ப்யூட்டர் உலாவியில் படத்தைத் தேடும்போது படத்தின் பரிமாணங்களைக் கண்டறியலாம்.
உங்கள் தேடல் முடிவுகளில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
வலது பேனலில், படத்தின் விரிவாக்கப்பட்ட காட்சியின் மீது சுட்டியை நகர்த்தவும்.
உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டரில், படத் தேடல் முடிவுகளை அளவின்படி வடிகட்டலாம். படத்தைத் தேடிய பிறகு தேடல் பட்டியின் கீழ் கருவிகள் அதன் பிறகு அளவு என்பதைக் கிளிக் செய்யவும்.

படத் தேடல் முடிவுகளை வடிப்பான்கள் மூலம் சுருக்குதல்
படத் தேடல் முடிவுகளுக்கு மேலே உள்ள வடிப்பான்கள் மூலம் குறிப்பிட்ட படங்களை நீங்கள் கண்டறியலாம். என்ன தேடுவது என்பது 
உறுதியாகத் தெரியவில்லை எனில் விரிவான படத்
 தேடலுடன் தொடங்கி வடிப்பான்களைச் சேர்த்து முடிவுகளைச் சுருக்கலாம்.
உங்கள் தேடல் வார்த்தைகளுடன் தொடர்புடைய
 சொற்களை அதிகம் தேடப்பட்டவற்றின் அடிப்படையில் வடிப்பான்கள் காட்சிப்படுத்திடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிப்பான்களைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தேடல் வார்த்தைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வடிப்பான்களுடனும் பொருந்துகின்ற பட முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள். ஒரு வடிப்பானை அகற்ற, அதை மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: வடிப்பான்களில் உள்ள பரிச்சயமற்ற சொற்களை நீங்கள் அடையாளம் காண உதவும் வகையில் பெரும்பாலான வடிப்பான்கள் சிறுபடவுருக்களைக் கொண்டிருக்கும்.
முக்கியம்: சில நாடுகள் அல்லது மொழிகளில் இந்த அ
ம்சம் கிடைக்காது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 25 டிசம்பர், 2022

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரழந்துள்ளனர்.

ண்டி - அக்குறணை - துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர்.
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி 
உயிரிழந்துள்ளனர். 
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐந்து பேர் இருந்தனர். 
அவரும் மண் மேட்டின் கீழ் விழுந்து படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 24 டிசம்பர், 2022

எப்பாவல, கிராலோகம பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்ப்பு


அநுராதபுரம் எப்பாவல - கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட - ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் 
தல்துவ தெரிவித்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட மின்சார திருத்த வேலை செய்யும் நபரை காவல்துறையினர் அங்கு இருந்த போது கைது செய்தனர், காணாமல் போயிருந்த சிறுவனையும் காவல்துறையினர் 
மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் கடந்த 19-12-2012  அன்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 23 டிசம்பர், 2022

புத்துாா் - வாதரவத்தை யில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் சடலமாக மீட்பு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 
மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. 
இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 
சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 22 டிசம்பர், 2022

கிளிநொச்சி பளையில் கோர விபத்தில் பலியான இளம் தாயார்..தவிக்கும் பிள்ளைகள்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 
இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை 
வலயக்கல்விப் 
பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் 
கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார்
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார்
இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத கண்ணீருக்கும் யார்
 பதிலளிப்பது?

இதே விபத்தில் பத்து வயது மாணவி ஒருவரின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமைய போகிறது.எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படியான அதிவேக போக்குவரத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகின்றதோ.
எமது இணையங்களின் ஆழ்ந்த இரங்கல்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 21 டிசம்பர், 2022

யாழ் சென்ற அரச பேருந்து தடம்புரண்டு பாரிய விபத்து..ஒருவர் பலிபலர் படுகாயம்!!!.

கிளிநொச்சி – பளை ஏ9 வீதியில், முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் 15 இற்கு மேற்பட்டவர்க
ள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.21-12-2022..இன்று மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.முள்ளியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு 
தடம்புரண்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன், 15 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 20 டிசம்பர், 2022

புளோரிடாவில் படுக்கை அறையை சுத்தமாக வைக்கச் சொன்னதால் ஆத்திரத்தில் தாய் மீது கொலை முயற்சி

அமெரிக்காவின் புளோரிடாவில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியது. 
ஜேக்கப்பிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 
வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜேக்கப்பை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
பின்னர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் 
குத்தியதாக கூறினான். 
தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளான். 
அவன் துப்பாக்கி கொண்டு வர முடியாது என்று கூறியதுடன், கத்தி கொண்டு வருவதாகவும் கூறி கத்தியை கொண்டு வந்து 
கொடுத்திருக்கிறான். 
மேலும், அந்த நண்பர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>