siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 டிசம்பர், 2022

சீனாவில் தெளிவற்ற காலநிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல் பலர் காயம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து 
ஏற்பட்டு உள்ளது.
இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக அந்த பாலத்திற்கு சென்றுள்ளனர். பலர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி
 நடந்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக