siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் கணவரை தூக்கில்இடத்தீர்ப்பளித்துள்ளர் ?

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை...

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு .யாழில்.மாணவி தற்கொலை!!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஐங்கரன் அனுசியா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை  செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அரசாங்கம் அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே தாம் இதனைக் கருதுவதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். அம்பியூலன்ஸ் சேவையை இந்தியாவிலுள்ள தனியார்...

வியாழன், 25 பிப்ரவரி, 2016

ஹரிஷ்ணவியின் படுகொலை: அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது !

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட...

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்?

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? 1. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும்....

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஐங்­க­ர­நேசனிற்கு மல்­லாகம் நீதி­மன்றம் பிடியாணை!

சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான விட­யத்தில் வட­மாகாண சபையால் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என விவ­சாய அமைச்சர் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பாக ஆய்வு அறிக்கை வெளியிட்­டது ஏன் என மல்­லாகம் நீதி­மன்றம் கேள்வி  எழுப்­பி­யுள்­ளது. இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது,சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில்­ உள்ள தண்­ணீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான வழக்கு நீதிவான் ஏ.ஜுட்சன் முன்­னி­லையில் நேற்று முன்­தினம்...

சனி, 20 பிப்ரவரி, 2016

சங்கிலியை திருட முயன்ற மாணவவன் ஆசிரியையின் துனிச்சலால் முறியடிப்பு!

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை  காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த  நிலையில்,  சீருடை அணிந்த இளைஞன் ஒருவனும், வேறு ஒரு இளைஞனும் மோட்டார் சைக்கிளில்...

வியாழன், 18 பிப்ரவரி, 2016

யாழ்.குடாநாட்டு வான்பரப்பில்இன்றும் வட்டமிட்ட கிபிர்!

யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை  மும்முறை வட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது. அன்று பெரிதாக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றவில்லை  ஆனால் இன்றைய தினம்  யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை...

புதன், 17 பிப்ரவரி, 2016

நாட்டில் கையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசிக் கட்டணத்தை செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை  அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும்  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பருத்தித்துறையிலிருந்து 773 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மூளாய், பொன்னாலைக்கான 773 ஆம் பாதை இலக்க பஸ் சேவை கடந்த 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. தினமும் காலை 5.45 மணிக்கும் பிற்பகல் 2.15 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்தும் காலை 8 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் பொன்னாலையிலிருந்தும் இருசேவைகள் இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை இ.போ.ச. பணிமனை முகாமையாளர்  கே.கந்தசாமி  தெரிவித்தார். கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தினால் தடைப்பட்டிருந்த...

சனி, 13 பிப்ரவரி, 2016

வீட்டை உடைத்து பெறுமதியான பணம், நகை கொள்ளை!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதன் வீதி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உடைத்து வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.  வீட்டில் இருந்த  5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விமானம் நடுவானில் கோளாறானது : விமானத்தின் போக்கில் சென்ற விமானி

பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரோட்டில் தரையிரங்கியுள்ளது. 40 வயதுடைய விமானி ஒருவர், சிறிய ரக விமானம் ஒன்றினை, Seine-et-Marne என்ற பிரெஞ்சு துறையில் இருந்து எடுத்துக்கொண்டு  சென்றுள்ளார். அப்போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு, தாறுமாறாக ஓடியுள்ளது. விமானத்தின் போக்கில் சென்ற...

சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுவர்க்கு பிச்சை எடுத்து உதவும் பெரியவர்!!!

பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களை கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. குஜராத் மாநிலத்தின் மெக்னசா என்ற சிறு கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு செல்லும் கிம்ஜிபாய் என்ற முதியவர், அங்கு படித்துவரும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் பேனா, பென்சில்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பது வழக்கம். இந்த முறை அங்கன்வாடிக்கு சென்ற முதியவர், தங்கத்தோடு...

புதன், 3 பிப்ரவரி, 2016

தனியார் பேருந்து ஓட்டோவை மோதியதால் :மூவர் படுகாயம்!!!

யாழில் தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி  பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்திலருந்து...