siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு .யாழில்.மாணவி தற்கொலை!!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஐங்கரன் அனுசியா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை 
செய்துள்ளார்.
நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக