siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 13 பிப்ரவரி, 2016

வீட்டை உடைத்து பெறுமதியான பணம், நகை கொள்ளை!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதன் வீதி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உடைத்து வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 
வீட்டில் இருந்த 
5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக