siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 மார்ச், 2016

உயர் பெருஞ்சாலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பில் இரண்டு உயர்ந்த பெருந்தெருக்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
கொழும்புக்குள் நாளாந்தம் அதிகரித்து வரும் வாகனங்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையிலேயே இந்த திட்டத்துக்கு ஒப்புதல் இன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு உயர்ந்த பெருந்தெரு களனி முதல் ராஜகிரிய வரையிலான பகுதிக்கு 6.9 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது.
அது பத்தரமுல்லை, மாலபோ அத்துருகிரிய மற்றும் வெளியக சுற்றுவீதி ஆகியவற்றுடன் இணைக்கப்படவுள்ளது.
இரண்டாவது உயர் பெருந்தெரு 5.8 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதாக களனி பாலம் முதல் கொழும்பு கோட்டை வரைக்கும் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பானிய அரசாங்கம் ஆகியன நிதியுதவியை வழங்கவுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக