siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 ஜனவரி, 2019

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  சாவகச்சேரி பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.  சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் குறித்த...

கொடிகாமத்தில் காணி சண்டையில்ö முதியவர் அடித்து கொலை

யாழ்ப்பாணணத்தில் காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இச்சம்பவம்$  இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த 78 வயதான செல்லன் சின்னத்துரை என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்  தெரியவருவதாவது, குறித்த முதியவருக்கும் , மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி...

போலியான தண்ணீர்ப் போத்தல் விற்பனை யாழ் குடாநாட்டில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான தண்ணீர்ப் போத்தல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு விற்பனை செய்து வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் குறித்த  போத்தல்கள சிக்கின. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய வர்த்தக நிலையம்...

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பூப்புனித நீராட்டு விழாவிற்கு யாழிலிருந்து சென்ற குடும்பம் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி எல்லை வீதியிலுள்ள தமது உறவினர் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு குறித்த குடும்பத்தினர் காரில் புறப்பட்டுள்ளனர். அதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கத்தால் சடுதியான...

இமையாளன் பகுதியைச் சேர்ந்த 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணத்தில் நான்கு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார் வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா...

நுணாவிலில் புகையை சுவாசித்த முதியவர் மருத்துவமனையில்

குளியலறையில் காணப்பட்ட கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி நுணாவில்  கிழக்கில் இடம்பெற்றது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையைத் துப்பரவு செய்ய கூலிக்கு ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.அங்கு வந்த அவர் கல்சியம் நீக்கியை கறைபடிந்துள்ள பகுதியில் ஊற்றியுள்ளார். அதன் போது எழுந்த புகையைச் சுவாசித்த  முதியவர்...

வெள்ளி, 25 ஜனவரி, 2019

வெகு விரைவில் பால்மாவிற்கும் புதிய விலைச்சூத்திரம்

பால் மாவிற்கும் புதிதாக விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு இவ்வாறு விலைச் சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பால் மா விலை தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போது விலைச் சூத்திரமொன்றை உருவாக்குவது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நுகர்வோர்  விவகார அதிகாரசபை  பால் மா இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள்,...

புதன், 23 ஜனவரி, 2019

மூன்று வயதுப் பாலகன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றில் மின்சாரம் தாக்கி மூன்று வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளது.நேற்றுக் காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு...

சனி, 19 ஜனவரி, 2019

மரண அறிவித்தல், திருமதி.சர்வாணி சுரேஸ்குமார்.16-01-19

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும், நிருஸான், நிலக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும், தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா)...

வியாழன், 17 ஜனவரி, 2019

நாட்டில் வெற்றுக் கைகளினால் உணவு விற்பனை செய்ய தடை

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

பரவும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் யாழில்

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கன்றன. உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல்  ஏற்பட்டுள்ளது. 31ம் திகதி அருகிலுள்ள...

புதன், 16 ஜனவரி, 2019

கோர விபத்து யாழில் சிறுவன் பல!! நால்வர் படுகாயம்

  மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அதில் 12 வயது சிறுவன்  உயிரிழந்தான். ஏனைய மூவரும் மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர்.முச்சகரவண்டி  இணுவில்...

திங்கள், 14 ஜனவரி, 2019

யாழில் இளைஞன் மர்ம நபர்களினால் அடித்துக் கொலை

கோடாரிப் பிடியால் தாக்கப்பட்ட இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் வடமராட்சி கற்கோவளம் தண்ணீர் பந்தலடிப்பகுதியில்12.01.19.  இரவு 8.30. மணியளவில் நடந்துள்ளது.கற்கோவளத்தைச் சேர்ந்த  22 வயதுடைய வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். இளைஞன் மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிற்றுண்டி விற்பனை  செய்யும் முச்சக்கரவண்டி வாகனத்தை அவருடைய நண்பர் மறித்து றோல்ஸ் கேட்டதாகவும், இதன்...

இரு தமிழர்கள் கொழும்பு மாநகரில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை.

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.கொட்டாஞ்சேனையை  சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.வத்தளையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது  மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன்...

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

புன்னைக்குடா கடலில் நீராடச்சென்ற மாணவன் சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு, புன்னைக்குடா கடலில் நீராடுபோது காணாமல்போன  மாணவனொருவனின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி- குமாரவேரலியார் கிராமத்தினைச் சேர்ந்த குபேந்திரன் ஹரிஸ்வரதன் என்ற 14 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐந்து மாணவர்கள் புன்னைக்குடா கடலில் நீராடுவதற்குச் கடந்த வியாழக்கிழமை மாலை...

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பணமும் நகையும் யாழில் பேருந்தில் பறிகொடுத்த பெண்

தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுண் தங்க நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் பேருந்தில் பறிகொடுத்த பெண், ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.  குறித்த பெண் அழுகையுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இன்று பகல் பயணித்த பெண், யாழ்.நகருக்கு பேருந்து வந்தடைந்த போதே தனது கைப்பையை அவதானித்துள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த பெண் சுன்னாகத்தில் பணத்தைப் பெற்று தனது கைப்...

யாழில் போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில் நல்லிணக்க புரத்தில் உள்ள இரு  மாணவர்களும்...

புதன், 9 ஜனவரி, 2019

கிளிநொச்சில் கோர விபத்தில் பலியான யாழ் இளைஞர்கள்

கிளிநொச்சில் 08.01.2012. இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகி  இருந்தனர். பளையைச் சேர்ந்த 36 வயதான பி.ஜெயக்குமார், பளை, மாசாரைச் சேர்ந்த 32 வயதான கே.குகதாஸ், சுழிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ரதீஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தனர்.இவர்களில்...

திங்கள், 7 ஜனவரி, 2019

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் யாழில் பலி

யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது 46) என்பவரே  உயிரிழந்தவராவர். குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டு இருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு...

மரண அறிவித்தல் திரு தம்பிஜயா குணரத்தினம்,05, 01 19

மலர்வு,  30 03 1941- உதிர்வு, -05, 01 2019 யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தம்பிஜயா குணரத்தினம். (ஓய்வுபெற்ற பொருத்தினர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை) அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான  தம்பிஜயா செல்லம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சீவரத்திணம்...

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பாரவூர்தி தடம் புரண்டு கோர விபத்து….. !! இருவர் ஸ்தலத்தில் பலி

கொழும்பு, ஜா-எல, வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று (சனிக்கிழமை)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்கலன் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று  வீதியை விட்டு தடம் புரண்டமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில்,...

சனி, 5 ஜனவரி, 2019

சவுதி அரேபியாவில் வவுனியா பெண் தற்கொலை

சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற, வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு மாதங்களின் முன்னர் அங்கு அவர் தற்கொலை செய்து கொண்ட போதிலும், கடந்த சனிக்கிழமையே அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள்  இடம்பெற்றுள்ளன. கணவன் இறந்து விட்ட நிலையில், இந்த பெண்ணே குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குமாரவேல் அன்னக்கிளி 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். இவரது...

வியாழன், 3 ஜனவரி, 2019

கோர விபத்து கொழும்பிலிருந்து யாழ் சென்ற வாகனம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து சென்ற ஹையேஸ் ரக வான் மோதுண்டு  விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் ஹையேஸ்...

நாட்டில் வாகனங்களை வாங்குவதற்கு காத்திருப்போருக்கு தகவல்

இலங்கையில் 2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும் என வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமை மற்றும்  ரூபாவின் விலையில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது; 2019ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால்,...

ஒரு மாதமேயான குழந்தையை உயிருடன் புதைத்த கொடூரத் தாய்

பிறந்து ஒரு மாதமான குழந்தையை உயிரு டன் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஹட்டன் யூனிப்பீல்ட் தோட்டத்தில் வசித்து வரும் 28 வயதான பெண்ண இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரான இந்த பெண் நேற்று முற்பகல் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க செய்துள்ளார். இதன் பின்னர்,  குப்பைகளை போட வெட்டப்பட்டிருந்த குழிக்குள் குழந்தையை வைத்து மண்ணை போட்டு மூடியுள்ளார்.குழந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால், பெண்ணின்...