தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுண் தங்க நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் பேருந்தில் பறிகொடுத்த பெண், ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் அழுகையுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இன்று பகல் பயணித்த பெண், யாழ்.நகருக்கு பேருந்து வந்தடைந்த போதே தனது கைப்பையை அவதானித்துள்ளார்.
அளவெட்டியைச் சேர்ந்த பெண் சுன்னாகத்தில் பணத்தைப் பெற்று தனது கைப் பையில் வைத்துள்ளார்.
பின்னர், தனது நகைகளையும் பாதுகாப்பு கருதி கைப்பையில் வைத்துக் கொண்டும் பேருந்தில் பயணித்துள்ளார்.
யாழ் நகரைப் பேருந்து வந்தடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்கும் போதே கைப்பை திறந்த நிலையில் இருப்பதனை அவர் அவதானித்துள்ளார். கைப்பையில் இருந்த பணமும், நகையும் திருடப்பட்டுள்ளது.
பெரும் பதற்றமடைந்த பெண் பெரும் அழு குரலுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக