siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 ஜனவரி, 2019

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 சாவகச்சேரி பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
 இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
 சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </




0 கருத்துகள்:

கருத்துரையிடுக