siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 10 ஜூலை, 2019

திடீர் மழையுடன் யாழில் நின்று போன மின்சாரம்!! மக்கள் பெரும் அசௌகரியம்

நீண்ட நாட்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓரளவு மழை பெய்துள்ளது. கடந்த ஆறு  மாதங்களுக்கு மேலாக கடும் வரட்சியை சந்தித்து வந்த யாழ் மாவட்ட மக்கள், இம்மழையினால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 1:45 முதல் குடாநாட்டின் யாழ் நகரம், நல்லூர் உள்ளிட்ட வலிகாமத்தின் பல்வேறு
 பிரதேசங்களிலும் பலத்த காற்றுடன் திடீரென நல்ல மழை பெய்தது. பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமையினால், இந்த திடீர் மழை பெய்தது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
எனினும், இன்று காலை வேளையில் மழை பெய்தமையைக் கண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் திளைத்தனர். இன்று காலை வேளையில் கடுமையான வெப்பம் நீங்கி சற்று கு
ளிர்மையான நிலை குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ளதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.இதே வேளை இன்று அதிகாலை வேளையில் குடாநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தடைப்பட்டிருந்த மின்சாரம் இன்று முற்பகல் 10:45 அளவில் வழமைக்கு
 திரும்பியது. குறித்த மின் தடையினால், இல்லத்தரசிகள் முதல் பாடசாலை மாணவர்கள், மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோரும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தமை 
குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக