siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 28 ஜூன், 2021

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் பலி

இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அங்கு தினசரி கோவிட் பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.அதன்படி இந்தோனிஷாவில் மருத்துவர்களுக்குச் சீன தடுப்பூசியான சினோவாக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சினோவாக் வேக்சினின் 2 டோஸ் எடுத்துக் கொண்ட...

வெள்ளி, 25 ஜூன், 2021

நாட்டில் பெற்றோர்களின் கவனத்திற்கு.. பிள்ளைகள் தொடர்பான எச்சரிக்கை

 பிள்ளைகள்  தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியின் முன்னால் இருக்கும் சிறார்களுக்கு நீண்டகால உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.தனால், தற்போது கோவிட் தொற்று காலத்தில் சிறுவர்ளுக்கு பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்கு தேவையான பாடங்களுக்காக மாத்திரம் தொழிநுட்பத்தை...

செவ்வாய், 22 ஜூன், 2021

மட்டக்களப்பில் பிள்ளையாரடி பகுதியில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி..

    மட்டக்களப்பில்   இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரிப்பர் சாரதி ஒருவர் பலியானதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு – பிள்ளையாரடி பகுதியில் 21-06-2021.அன்று மாலை 5.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இராஜாங்க    அமைச்சரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த...

சனி, 19 ஜூன், 2021

நட்டில் தேங்காயின் விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி

தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை 18-06-2021.அன்று வெளியிட்டுள்ளதுதேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை, 2020 செப்டம்பர் 25 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு எண் 2194/73 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது இரத்து செய்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வியாழன், 17 ஜூன், 2021

மரண அறிவித்தல் திரு கணேசலிங்கம் காந்தரூபன் 17.06.2021

பிறப்பு   23-01-1985-- இறப்பு-17-06-2021.யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருகணேசலிங்கம் காந்தரூபன்    (காந்தன்),அவர்கள்,.17-06-.2021   வியாழக்கிழமை  இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியை  20-06-2021,ஞாயிற்றுக்கிழமை  ,அன்று மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல்...

திங்கள், 14 ஜூன், 2021

நாட்டில் பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப் படும் மில்க் வர்த்தகப் பெயருடைய பிரிமா கோதுமை மாவின் விலை 3 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பிரிமாவினால் விற்கப்படும் மில்க் வர்த்தகப் பெயருடைய 50 கிலோகிராம் பொதி மாவின் விலை 4000 ரூபாவிலிருந்து 4175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பிரிமா அண்மையிலேயே மாவின் விலையை 4 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது....

சனி, 12 ஜூன், 2021

பாரவூர்தி விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து விபத்து சாரதி உட்பட 1,600 உயிர்கள் உயிரிழப்பு

பாரவூர்தியொன்று, 1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மொரகஹமுல, கல்ஓய பாலத்துக்கு அருகில் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பாரவூர்தியின் சாரதி பலியானதுடன், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட 1,600 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பிபிலை பிரதேசத்திலிருந்து கண்டி, கம்பளை பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் உயிரிழந்த சாரதி,...

வெள்ளி, 11 ஜூன், 2021

கம்பளையில் பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தை கொரோனாவால் மரணம்

கம்பளை, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில், பிறந்து 8 நாட்களேயான ஆண் குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (9) உறுதிசெய்யப்பட்ட 67 கொவிட் மரணங்களுள் இக்குழந்தையின் மரணமும் உள்ளடங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், அக்குழந்தைக்குத் தீவிரமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இதனால்,...

வியாழன், 10 ஜூன், 2021

துவரங்காடு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது

திருகோணமலை – வரோதயநகர்,துவரங்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 8 பறள் கோடாவையும் கைப்பற்றியுள்ளதாக திருகோணமலை மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்குக் கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி...

புதன், 9 ஜூன், 2021

கரடியனாறுகித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (08) மாலை கித்துள் வயல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துறை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை 06 மணியளவில் வீட்டிலிருந்து இருந்து வயல் காவலுக்காக கித்துள் வயல்பகுதிக்கு சென்ற வேளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று காலை மீட்கப்பட்ட சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா...

செவ்வாய், 8 ஜூன், 2021

வெல்லவாயவில் வீடு ஒன்றிலிருந்து இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு

மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் இருந்து இளம் தம்பதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.36 வயதுடைய ஆணின் சடலமும் 21 வயதுடைய பெண்ணின் சடலமுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழந்த நபர் உள்ளூர் மருத்துவம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெல்லவாய...

திங்கள், 7 ஜூன், 2021

நாட்டில நிலவும் சிரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 14 பேர் இறப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்து மாவட்டங்களில் பதினான்கு பேர் இறந்துள்ளனர், 60, 674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.கம்பஹா, இரத்னபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவர எலிய, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களின் போது இரண்டு பேர் காயமடைந்தனர், இருவரை காணவில்லை என்றும் மத்திய மையம் குறிப்பிட்டுள்ளது.14...

சனி, 5 ஜூன், 2021

தெவனகல்லவில் மண்சரிவில் சிக்கி 4 பேர் மாயம் – மாணவி ஒருவர் சடலமாக மீட்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுமாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இரத்தினபுரியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்நிலையில்...

வெள்ளி, 4 ஜூன், 2021

சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் 06 சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காய விதைகள் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலாபம், வட்டக்கல்லிய பகுதியில் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 362 கிலோ 950 கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 571 கிலோ 400 கிராம் பெரிய வெங்காய விதைகள் நேற்றைய தினம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது 06 சந்தேக...