siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 28 ஜூன், 2021

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் பலி

இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.அங்கு தினசரி கோவிட் பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன்படி இந்தோனிஷாவில் மருத்துவர்களுக்குச் சீன தடுப்பூசியான சினோவாக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சினோவாக் வேக்சினின் 2 டோஸ் எடுத்துக் கொண்ட பிறகும் கூட சுமார் 20 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாகக் கடந்த 2 வாரங்களில் மட்டும் சினோவாக் வேக்சின் எடுத்துக் கொண்ட 358 சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது சினோவாக் வேக்சின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீனாவின் சினோவாக் வேக்சின் மருத்துவ சோதனைகளில் 51% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஒரு வேக்சின் அனுமதி பெறக் குறைந்தபட்சம் 51% செயல்திறன் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவு செயல்திறனை மட்டுமே சினோவாக் கொண்டுள்ளது.
தற்போது பயன்பாட்டிலுள்ள வேக்சின்களேயே சினோவாக் தான் குறைவான தடுப்பாற்றலை கொண்டிருக்கிறது. இருப்பினும், அதுவும்கூட முறை சோதனைகளில் பெறப்பட்ட முடிவுகள் இல்லை எனச் சர்வதேச ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கோவிட் வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள் கூட கோவிட்டை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக