siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 7 ஜூன், 2021

நாட்டில நிலவும் சிரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 14 பேர் இறப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்து மாவட்டங்களில் பதினான்கு பேர் இறந்துள்ளனர், 60, 674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் 
தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்னபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவர எலிய, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களின் போது இரண்டு பேர் காயமடைந்தனர், இருவரை காணவில்லை என்றும் மத்திய மையம்
 குறிப்பிட்டுள்ளது.
14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன, 817 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் 72 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இறப்புக்களை பொறுத்தவரையில் கம்பஹாவில் – 2, இரத்னபுரியில் – 3, கொழும்பு, புத்தளம், களுத்துறை, காலியில் தலா – 1, கேகாலையில் – 5 என்ற எண்ணிக்கையில் இறப்புகள்
 பதிவாகியுள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக