siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 12 ஆகஸ்ட், 2026

நாட்டில் கிளிநொச்சி A9 வீதியில் விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரவூர்திகள் மோதியதில் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற பாரவூர்தி வீதியில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த பாரவூர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பாரவூர்தியின் உதவியாளராக பணியாற்றிய 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக