siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை


சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான்.

இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாயாருக்கும், லூவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தாயாரை நேரில் பார்த்த லூ அவரிடம் பேசும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லூ அருகில் நின்ற சிறுவனை தூக்கி வெளியே வீசி கொலை செய்தான்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக