siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 21 ஜூலை, 2020

கம்பஹாவில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ

 நாட்டில் கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.கந்தகாடு புனர்வாழ்வு 
நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.அவர் கம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு 
நடத்தியுள்ளதாக
 வைத்தியர் சுபாஸ் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக