siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கணவரை அறையில் பூட்டிவிட்டு தோழியுடன் புதுப்பெண் ஓட்டம்!

வங்காளதேசம் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் சன்னால்லா. இவரது மகள் ஜன்னத். இளம்பெண்ணான இவருக்கு பேஸ்புக் மூலம் 2012-ம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த நைனா என்ற இளம்பெண்ணுடன் 
நட்பு ஏற்பட்டது.
இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். அவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவுக்கு சென்றது. இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஜன்னத் இந்தூர் வந்தார். அங்கு தோழி நைனா வீட்டில் தங்கி இருந்தவாறு உள்ளூர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.
பேஸ்புக் தோழிகளுக்கு இடையேயான நெருங்கிய
 நட்பை பெற்றோர் 
அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் நைனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். இதற்கு நைனா எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் திருமணம் ஆன பின்னும் தோழி ஜன்னத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதித்தாள்.
மகேஷ் என்பவருக்கும் நைனாவுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு மகேஷ்- நைனா தேனிலவுக்காக கோவா புறப்பட்டனர். மணமகள் நைனா தன்னுடன் பேஸ்புக் தோழி ஜன்னத்தையும் கோவாவுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகுதான் விபரீதம் ஏற்பட்டது.
அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதை அறிந்த மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வழியாக அறையில் இருந்து வெளியேறி ஊர் வந்து சேர்ந்தார். நைனாவிடம் வந்து ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு மகேஷ் கூறினார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் கணவர் மீது போலீசிலும் 
புகார் செய்தார்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, நைனாவும், ஜன்னத்தும் கணவன்- மனைவி போல் கருதிக் கொண்டு அன்பு செலுத்துகிறார்கள். ஜன்னத் தனது போனில் நைனாவின் எண்ணை மனைவி என்று குறிப்பிட்டு பதிவு செய்து வைத்துள்ளார். பிரிக்க முடியாத அளவுக்கு நட்பு உருவாகி விட்டது. பெற்றோர் இதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள்
 என்றார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக