siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பாடசாலைகளுக்கு நாட்டின் 6 ஆம் திகதி வரை விடுமுறை

எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள், மே மாதம் 6ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6ம்  திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வைத்து, இதுவரையில்  பாரிய அளவான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை...

வியாழன், 25 ஏப்ரல், 2019

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம்,.பரிமளம்.,24.04.19

  யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                  திருமதி இராசரத்தினம்.பரிமளம்  பரிமளம்  அவர்கள் 24-04-2019 புதன் கிழமை அன்று காலமானார். அன்னார்,    காலஞ்சென்ற அமரர்  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான மாரிமுத்து   தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா...

திங்கள், 22 ஏப்ரல், 2019

போக்குவரத்துசேவைகல் யாழ்.குடாநாட்டில் முடக்கம்

யாழ்.குடாநாட்டில் இன்று பிற்பகல் நான்கு மணியுடன் இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து பகுதிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படுவதாக யாழ்.நகரப்பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டநிலையில் இலங்கை போக்குவரத்துச்சபையும் தனது சேவையை நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. ...

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

குப்பிளாநில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

யாழ்  குப்பிளான், மயிலங்காடுப்பகுதியில்  மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

யாழில் புதுவருட தினத்தில் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும்  அறியமுடிகிறது. குறித்த விபத்து 15,04,2019, மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது, இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

போக்குவரத்து ஒழுங்கு விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள்

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார்.  பண்டிகைக்கால விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  இதேவேளை, கிராமப்புறங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தரும் மக்களின் வசதிகள் கருதி விசேட போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

கஸ்தானகஹவத்தயில் இசை நிகழ்விற்கு செல்ல முற்பட்ட இளைஞன் பலி

கொலன்ன, கஸ்தானகஹவத்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்விற்கு செல்வதற்காக தயாராக இருந்த இருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதன்போது பலத்த காயமடைந்த இளைஞன் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளான்.  17 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.  சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி...

பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு சிகரட்களுடன் கைது

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளார்.  அவர்களில் ஒருவர் வேவல்தெனிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த பெண்ணிடம் இருந்து 43,480 சிகரட்டுக்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது. அடுத்த நபர் மாத்தறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 39,900...

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

விரைவில் காணி சுவீகரிப்பு !!!!!பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

யாழ்ப்­பா­ணம்,  மண்­டை­தீவு உட்­பட வடக்­கில் படை­யி­ன­ரின் தேவைக்­காக சுவீ­க­ரிக்­கத் திட்­ட­மிட்ட நிலங்­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் 29ஆம் திகதி பாது­காப்பு அமைச்­சின் செய­லர் மற்­றும் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ருக்கு இடை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் சந்­திப்­பொன்று  இடம்­பெ­ற­வுள்­ளது. மண்­டை­தீ­வில் நேற்­றை­ய­தி­னம் இடம்­பெற்ற காணி அள­வீட்டு முயற்சி கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னால் பாது­காப்பு அமைச்­சின்...

மரண அறிவித்தல், திருமதி விஸ்வலிங்கம் பூபதி..11-04-19

தோற்றம்--31.03.1948  –  மறைவு ,11.04.2019  யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும்,  உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி விஸ்வலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகன் தெய்வி தம்பதிகளின்  அன்பு மருமகளும், விஸ்வலிங்கம்(சிவக்கொழுந்து- உரிமையாளர் எரிபொருள் விற்பனை நிலையம்...

புதன், 10 ஏப்ரல், 2019

மரண அறிவித்தல், திரு கனகசபை நல்லையா .09.04.19

                                 தோற்றம்-  05 ,08 1933  --  மறைவு -09, 04 2019                                      யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை நல்லையா (ஓய்வுபெற்ற காவற்துறை உத்தியோகத்தர்)அவர்கள் 09-04-2019...

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

அனல் காற்று கொழும்பை தாக்கும் அபாயம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது அதற்கமைய கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் பல பாகங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும்...

நவற்கிரி நிலாவரைப் பகுதியில் கைகுண்டு வெடித்து சிறுவன் காயம்

யாழ் நவற்கிரி புத்தூர் மேற்கு நிலாவரைப் பகுதியில் சிறுவனொருவன்  கைக்குண்டொன்றை எடுத்து விளையாடியதில் அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று 09,04,2019,செவ்வாய்க்கிழமை(09)பிற்பகல்  நடைபெற்றுள்ளது இந்தச் சிறுவன் தோட்டத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெற்றுக் காணியொன்றிலிருந்து கைக்குண்டொன்றை எடுத்து அதனை ஏதோ...

ஹோன்களை பயன்படுத்துவது இலங்கையில் வரும் புதிய தடை

இலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது. எனினும் அவசரசேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 8 ஏப்ரல், 2019

அமரர் திரு க.சுப்பிரமணியம்.8ம் ஆண்டு நினைவஞ்சலி.08,04,19

மண்ணில் : 06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011 திதி : 08 ஏப்பிரல் .2019.இன்று யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர் திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. எட்டாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!! எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா! ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!! தாங்கியே பிடிக்க தலைவனின்றி தவிக்கின்றோம் ஐயா! வாங்கியே நீ வைத்தவற்றில் உன்...

சனி, 6 ஏப்ரல், 2019

திருமதி சபாரத்தினம் 3ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2019

உதிர்வு .08.04.2016 திதி. 06-04-2019 இன்று  யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த   அமரர். திரு திருமதி சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 2ஆண்டு நினைவஞ்சலி  06-04-2019 இன்று  காலச்சுழற்சியில் மூன்றாம்  ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை  நித்தம் நாம்  இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால்...

புதன், 3 ஏப்ரல், 2019

எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுற

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுநாளான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி  கூறியுள்ளார்.  இதேவேளை,இந்த வருடம் தமிழ்- சிங்களப் புதுவருடப் பிறப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  கொண்டாடப்படுகின்றமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மூத்த தமிழ் திரையுலக பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.

மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் 2.4.19 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக‌ சென்னை அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த ‚பேட்ட‘ திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில்...

அமரர் தம்பு செல்வராஜா 5ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.19

.>மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014 திதி -.02.04.2019 யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு செல்வராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் நினைவு நாள்  02,0419,இன்று எங்கள் வாழ்வில் ஒளியேற்றி ஐந்தாண்டு   போயும் என்றும் எம்மோடு இருக்கும்...

திங்கள், 1 ஏப்ரல், 2019

அதிகூடிய வெப்பநிலை எதிர்வரும் 5 தொடக்கம் 15 ம் திகதி வரை

எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில்  அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த...

மரண அறிவித்தல், திரு வல்லிபுரம் செல்லத்துரை (தனையா).01.04.19

தோற்றம் : 02,12,1934, — மறைவு : 01 ,04 2019 யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,ராஜா வீதி யை), வதிவிடமாகவும் கொண்ட   திரு வல்லிபுரம் செல்லத்துரை (தனையா)  அவர்கள் .01.04.19  திங்கள்க் கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார்சரஸ்வதி அவர்களின்   அன்புக்கணவரும்   திரு,சிவரறன்சன் (சுவிஸ்)  காலஞ்சென்ற  தவறன்சன்  ( ஜெர்மனி )    சிவறன்சினி  (இலங்கைஆகியோரின்  பாசமிகு...