siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

போக்குவரத்து ஒழுங்கு விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள்

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். 
பண்டிகைக்கால விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 
இதேவேளை, கிராமப்புறங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தரும் மக்களின் வசதிகள் கருதி விசேட போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி 
தெரிவித்துள்ளார். 
விசேட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் சேவைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அவை தொடர்பில் பொதுமக்களால் தொலைபேசியின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 0117 555 555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட முடியும். இதற்கென கையடக்கத் தொலைபேசியும் பயன்படுத்த முடியும். அதற்கான இலக்கம் 0771 056 032 ஆகும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை 
அறிமுகப்படுத்த முடியும். 
அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பாகவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாகவும் இந்தத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை 
மேற்கொள்ள முடியும். 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக