siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 20 ஜூன், 2020

சூரிய கிரகணம். கிருமிகள் அதிகம் பெருகும் வாய்ப்பு.மக்களே அவதானம்

நாளை 21-06-2020.சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும்.
இந்த கிரகணமானது பல நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம். இந்நிலையில் இங்குசூரிய கிரகணத்தை பொறுத்தவரை பல்வேறு நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன
.இவை அனைத்தும் ஆயுர்வேத முறைப்படி உருவானவையாகும். சூரியன் முழுமையாக தெரியாத காரணத்தினால் சூரிய கிரகணத்தின் நேரமானது, கெட்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால், கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.சூரிய
 கிரகணத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?- 
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.
சகல தோஷம் நிவர்த்தியாமி” என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும்

2020 ஆம் ஆண்டு தற்போது வரை பிறந்த குழந்தைகள் நிச்சயமாக சில தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தோஷநிவர்த்தி வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.வீட்டின் வாசலில் மாவிலை மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டும். அபிஷேகம் செய்து முடித்தபின்னர் விக்ரகங்களுக்கும், படங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.இந்த 
நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும்.அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாசெய்தால் நிச்சயமாக சூரிய 
கிரகணத்தின் போது ஏறபடும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக