siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 22 ஜூன், 2020

அம்பாறை மாவட்டத்தில் காலை கரை ஒதுங்கிய பாரிய மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்றையதினம் காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு 
அறிவித்துள்ளனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதே வேளை அம்பாறை மருதமுனை – பெரியநீலாவணை கடற்கரை இன்று இராட்சத
 சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
சுமார் 20 அடி உடைய குறித்த மீன் 1500 கிலோவிற்கு அதிகமான இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். கரைவலை மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்
 தெரிவித்துள்ளார்.
அரிய வகை புள்ளி சுறா பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது. இவ்விரு மீன்களையும் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்றதாக
 தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக