siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 14 ஜூன், 2020

யாழில் நீர் இறைக்கும் இயந்திரத்தை பீடி பிடித்தபடி இயக்கிய இளைஞன் பலி

புகைபி‍டித்துக்கொண்டு நீர் இறைக்கும் இயந்த்திரத்தை இயக்கும் போது தீக்காயத்திற்குள், உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சுன்னாகம் கந்தரோடையில் விவசாயம் செய்து வரும் குறித்த இளைஞர் 31 ஆம் திகதி தனது தோடடத்திற்கு நீர் இறைப்பதற்காக நீர் இறைக்கும் இயந்த்திரத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்த மண்ணெண்ணெய் அவரது உடலில் பட்டுள்ளது.
பின்னர் தோட்டத்தில் பீடி புகைத்துக் கொண்டு பெற்றோலை பயன்படுத்தி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கி உள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கூக்குரல் எழுப்பியவாறு கிணத்திற்குள் குதித்துள்ளார்.அவ்வாறு குதித்தவரை அயலில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (12) உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகார நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக