siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
 தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 53 சதவீதமானோர் (48,244 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களும் டெங்கு தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் 
பதிவாகியுள்ளனர்.
அத்துடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான புதிய டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக