siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2015

மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்.  வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நான் முன்பே வாக்குக் கொடுத்திட்டேன்???

தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே. மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி. தாய்:...

சனி, 19 டிசம்பர், 2015

இலவச தொலைபேசிகள் ஊடகவியலாளர்களுக்கு?

நாட்டிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் தொலைபேசிகளை வழங்கும் திட்டம் ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அடுத்த வருடம்...

புதன், 16 டிசம்பர், 2015

கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்

கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற ரயில் - கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர். ரயில் கடவையைக் கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பங்கதெனியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயிலுடன் பட்டுகமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் கப்புவத்தை புகையிரத கடவைக்கு அருகில் வைத்து மோதியதால் காரில்  பயணித்த இருவர்  பலியாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில்...

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இதோ டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் உலகிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலானது சளி, இருமல், என சாதாரண அறிகுறிகளாக ஆரம்பித்து இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம்  கொண்டதாகும். ‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை...

வியாழன், 10 டிசம்பர், 2015

மணப்பெண்ணிற்கு வழக்கமாகஅம்மாஅறிவுரை கூறுவார் மாறாக தந்தை???

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே! அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்.. 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன்,...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார். அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக...

திங்கள், 7 டிசம்பர், 2015

பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்த மொத்த தேயிலை உற்பத்தி, 26.7 மில்லியன் கிலோவாக பதிவாகி  இருந்தது. ஜனவரியில் இருந்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 279.8 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி...

வியாழன், 3 டிசம்பர், 2015

இருவர்.குளாய் கிணற்றுக்குள் மூச்சுத் திணறிபலி!!!

யாழ் உடுப்பிட்டி பகுதியில் குளாய் கிணற்றுக்குள் ஏற்பட்ட பழுது பார்ப்பதற்கு இறங்கிய 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார். புலோலி பகுதியினைச் சேர்ந்த மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையினைச் சேர்ந்த கிருஸ்னமூர்த்தி (வயது 61) ஆகிய இருவருமே  இச் சம்பவத்தில்  உயிரிளந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படிப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளாய் கிணற்று மோட்டர் பழுது பட்டுள்ளது....

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளான். நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து  செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது ...

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்  நடந்திருக்கிறது. தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது. பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது  போலத்தெரிகிறது  ....

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது. பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை  வழங்கியுள்ளது. பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு...

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண் ஒருவர்க்கு முகமாற்று அறுவை சிகிச்சைசாதனை?

அகோர முகம் படைத்த போலந்து பெண் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் பெரிய சாதனை புரிந்துள்ளனர். போலந்து நாட்டின் வாழும் 26 வயது பெண் Joanna என்பவர். இவருக்கு பிறவியிலேயே neurofibromatosis என்ற நோய் தாக்கியதால் அவருடைய முகம் நாள் ஆக ஆக அகோரமாக மாறிக்கொண்டே வந்தது. பிறரிடம் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட மிகுந்த கஷ்டப்பட்டார். எனவே அவருடைய முகத்தை 80% மாற்றி வேறு முகத்தை பொருத்த மருத்துவர்கள்  முடிவு...

வெள்ளி, 20 நவம்பர், 2015

இரு இளைஞர்கள் தாடிவளர்த்ததால் பொலிசாரால் கைது?

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய  இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில், நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு...

புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது. யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,  பாலமுனை ஆகிய  பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர்...

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ்  வங்கிகளில்  வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச்  செய்துள்ளனர். இலங்கையர்கள் மட்டுமன்றி...

திங்கள், 2 நவம்பர், 2015

யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் காட்சி கொடுத்த மயில்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது. ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில...

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைக்கு விண்ணிலிருந்து விழும் மர்மப்பொருளால் ஆபத்து இல்லை?

நவம்பர் 13ம் திகதி விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் இலங்கைக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று கலாநிதி சந்தன ஜெயரத்ன  தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து மேலும் தகவல் வெளியிடுகையில், வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை...

புதன், 28 அக்டோபர், 2015

தொலைக்காட்சி திருட்டில் திருடர்கள் சிக்கினர்

 மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார்...

வீடு ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளையர்களினால் திருட்டு

சுன்னாகம் kks வீதி கொத்தியாலடி சந்தியில் உள்ள வீடு ஒன்றில் கூரை வழியாக சென்று கொள்ளை இடம்பெற்றுள்ளது. இவ் வீட்டில் தம்பதிகள் வேலைக்கு சென்ற வேளையில் இந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளனர்.வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பெரும் மதிப்புள்ள கணணியை களவாடி வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளான். மாலை வேலை முடிந்து வீடுதிரும்பிய தம்பதியினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சுன்னாகம் பொலிசாருக்கு...

சில பகுதிகள் யாழ்- கண்டி ஏ9 வீதியின் உடைவு!

யாழ்ப்பாணம் கண்டிவரையான ஏ-9 வீதியின், கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்குகம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்கள் அதிகரித்த...

சரணாலயத்தில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்???

யால வனவிலங்கு சரணாலயத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் ஒருவர் திடீரென மரணித்துள்ளதாக திஸ்ஸமஹாரம பொலிஸார் தெரிவிக்கின்றனர். யால வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது குறித்த வெளிநாட்டுப் பெண் திடீரென சுகவீன முற்றுள்ளார். சுகவீனமுற்ற பெண் திஸ்ஸமஹாரம தெபரவௌல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிந்தவர் சீனப் பெண் எனவும் கடந்த 24ம் திகதி அவர்  இலங்கைக்கு  வந்துள்ளார் எனவும் பொலிஸார்...