siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 டிசம்பர், 2016

முதன்முறையாக ஏலியன்ஸை தொடர்பு கொள்ளபோகும் பூமி:?

கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து  வருகின்றனர். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ சார்ந்த அமைப்பான Extra Terrestrial Intelligence (METI) ஏலியன்ஸை முதல் முறையாக தொடர்பு கொண்டு ஹலோ சொல்ல திட்டமிட்டு களமிறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தூரத்தில்...

புதன், 28 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு நாகமுத்து கந்தப்பு

அன்னை மடியில் : 25 ஒக்ரோபர் 1936 — இறைவன் அடியில் : 26 டிசெம்பர் 2016 யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தப்பு அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வரட்ணம் அவர்களின்  அன்புக் கணவரும், தேவமனோகரி(டென்மார்க்), தேவமனோகரன்(சுவிஸ்),...

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கோர விபத்தில் வவுனியாவில் :மூவர் பலியானதாக தகவல்கள்!

 வவுனியா ஈறப்பெரியகுளத்தில் கோர விபத்து மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனினும் இதுவரை உறுதியாக பலியான விபரங்கள் பெறமுடியாமல் உள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கெண்டைனர் ஒன்றும் விபத்துக்குள்ளானதிலேயே  மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாகவும்  அறியப்படுகிறது. ...

அமரர் துரைசிங்கம் மகேந்திரன் 31ம் , நினைவஞ்சலி (அந்தயேட்டி)

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016 யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் (மகேன்)  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம்(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும், மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத்...

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மதியாபரணம் அமிர்தலிங்கம்.

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1954 — இறப்பு : 23 டிசெம்பர் 2016 யாழ். தோப்பைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை. வண்ணார்பண்ணை, சுவிஸ், ஜெர்மனி Wupperthal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் அமிர்தலிங்கம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், நளினி அவர்களின் அன்புக் கணவரும், முகிலன், யகலன் ஆகியோரின்...

சனி, 24 டிசம்பர், 2016

திரு முத்துக்குமாரு ஆறுமுகசாமி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பிறப்பு : 12 சனவரி 1942 - இறப்பு : 28 நவம்பர் 2016 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி (Böblingen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி .(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ் ஈழநாடு பத்திரிகை) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும். அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரிலும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கும், தொலைபேசி மற்றும் இணையவழியூடாக துயரைப்...

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மாம்பழம் சந்தியில் சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் கைது?

சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் உள்ள சலூன் ஒன்றில், இன்று (புதன்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த சிறுவர்கள் இருவரும் திருட முற்பட்டுள்ளனர். இதன் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,...

பேஸ்புக் தொலைகாட்சி சேவையினை ஆரம்பிக்கவுள்ளது

44re443ewநெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற  தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம்  தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு  வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த...

வியாழன், 22 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து பொன்னம்பலம்

மண்ணில் : 15 டிசெம்பர் 1931 — விண்ணில் : 19 டிசெம்பர் 2016 யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட   (மந்திரிமலை - நவக்கிரி) திரு சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், அன்னம்மா தம்பதிகளின்  அன்பு மருமகனும், பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், விஜயானந்தம்(கனடா),...

சனி, 10 டிசம்பர், 2016

உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு ஒரு பெண் பலி !

பாதுக்க – லியன்வல புகையிரத குறுக்கு வீதியில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்த அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன், உந்துருளி மோதுண்டுள்ளதாக காவற்துறை  தெரிவித்தது. இந்நிலையில் உந்துருளியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் ...

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அறிமுகம் செய்தது மற்றுமொரு வசதியினை யூடியூப் !

காணொளிகளை  ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது. இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது இவ் வசதியில் 4K காணொளிகளை  நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வசதி 360 டிகிரி வீடியோக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 4K காணொளிகளை  பதிவேற்றும் வசதி தரப்பட்டிருந்த நிலையில்...

பூநகரியில் வெட்டி எரித்து புதைக்கப்பட்ட சடலம் மீட்பு!

கிளிநொச்சி – பூநகரி, வாடியடி பிரதேசத்தை அண்மித்த பகுதியில் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பூநகரியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய கந்தையா சபாரத்தினம் என்ற விவ சாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  வவுனியா – குருமன்காடு பகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட கந்தையா சபா ரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல்...

சனி, 3 டிசம்பர், 2016

கொழும்பு தெஹிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

ஆரம்ப காலம் முதல் மனித சமூகம் இறைவழிபாட்டை தலையாய கடமையாக கடைபிடித்து வருகின்றனர். அதன் வழியில் வந்த இன்றைய சந்ததியினரும் அதனை கடைபிடித்து  வருகின்றனர். வாழ்கையை நெறிப்படுத்தும் வகையிலான சிறந்த வழிகாட்டல்களையும் , சிறந்த பயணத்தையும் கொண்டமைந்த இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. ஆகம மற்றும் கிராமிய முறையிலான வழிபாட்டுமுறைகள் இவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது. எனினும், நாகரிகம் என்னும் பெயரில் உலகமே ஒரு மாறுபட்ட கோணத்தில்...

புதன், 30 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி :28:01:16

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின்...

முதல் முறையாக இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலரின் 151 ரூபாக்குமேல்?

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா டொலரின் பெறுமதி நேற்றைய தினம் 151 ரூபாவை கடந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விடயம்  குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 151.07 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி 150.59 ரூபாவாக காணப்பட்டது. இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு...

செவ்வாய், 29 நவம்பர், 2016

பாரிய விபத்து முறிகண்டியில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

முறிகண்டியில் இடம்பெற்ற இவ் வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, அக்கரைப்பற்றில் இருந்து  யாழ். நோக்கிச் சென்று  கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை ஏழு மணியளவில்  கிளிநொச்சி அறிவியல் நகர்ப்...

திங்கள், 28 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி:28:11:16

 மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின்...

செவ்வாய், 22 நவம்பர், 2016

யாழ் நகரை அண்டிய பகுதிகள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவ மழையைத் தொடர்ந்து வழக்கம்போல யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன. மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு  வருகின்றனர். வருடந்தோரும் பருவ மழை ஆரம்பித்ததும்...

வெள்ளி, 18 நவம்பர், 2016

மகிழ்ச்சியான செய்தியை இலங்கை அகதிகளுக்கு 'UNHCR' கொடுத்துள்ளது ?

இலங்கை அகதிகள் 26,615 பேருக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா முகவர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 888,294 அகதிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களில்...

வியாழன், 17 நவம்பர், 2016

செல்வி அர்ச்சனா செல்லத்துரை டென்மார்க் நாட்டின்விமானியானர்

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது. முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது. பயங்கள்...

புதன், 16 நவம்பர், 2016

ஈழத்தமிழர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது !

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி  கருத்து வெளியிடுகையில், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில்...

வியாழன், 10 நவம்பர், 2016

யாழில் 20 வயது பெண் பகலில் கடத்தல்- தந்தை பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர்  தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை கல்யாணம் முடித்து தருமாறும்  அவர் கேட்டுள்ளார். ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாக...

புதன், 9 நவம்பர், 2016

கூடுதல் விலைகளிள் மருந்துகள்விற்பனையா ? உடனே அழையுங்கள்!

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி,...